Traditional rice varieties and its benefits

உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கு அரிசி பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. பல்வேறு வகையான அரிசிகளில், பாரம்பரிய அரிசி வகைகள், பெரும்பாலும் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரிசி என்று குறிப்பிடப்படுகின்றன, அவற்றின் தனித்துவமான சுவைகள், அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக கவனத்தை ஈர்த்துள்ளன. நவீன, மிகவும் சுத்திகரிக்கப்பட்ட அரிசியைப் போலல்லாமல், பாரம்பரிய அரிசி பொதுவாக அதன் இயற்கை ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கும் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான சுயவிவரத்தை வழங்கும் காலங்காலமாக மதிக்கப்படும் முறைகளைப் பயன்படுத்தி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் சிறிய, நிலையான பண்ணைகளில் வளர்க்கப்படும் இந்த வகை அரிசி, ஒரு கார்போஹைட்ரேட் மூலத்தை விட அதிகமாக வழங்குகிறது; இது செரிமானத்தை ஆதரிப்பதன் மூலமும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும், அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இந்தக் கட்டுரையில், பாரம்பரிய அரிசியின் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம், உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளில் அதன் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, சமச்சீர் மற்றும் சத்தான உணவைப் பராமரிப்பதில் அதன் பங்கை வலியுறுத்துவோம்.

பாரம்பரிய அரிசி வகைகள்:

கருப்பு கவுணி அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி

பூங்கார் அரிசி

காட்டுயானம் அரிசி

கருத்தக்கார் அரிசி

காலநமக் அரிசி

இரத்தசாலி அரிசி

மூங்கில் அரிசி

அறுபதாம் குறுவை அரிசி

இலுப்பை பூ சம்பா அரிசி

தங்கச் சம்பா அரிசி

கருங்குறுவை அரிசி

கார் அரிசி

குடை வாழை அரிசி

தூய மல்லி அரிசி

சீரக சம்பா அரிசி

சொர்ண மயூரி அரிசி

கிச்சலி சம்பா அரிசி

கருடன் சம்பா அரிசி

நீலம் சம்பா அரிசி

குழியடிச்சான் அரிசி

பிசினி அரிசி

சூரக் குறுவை அரிசி

வாலான் சம்பா அரிசி

திணை அரிசி

வரகு அரிசி

சாமை அரிசி

குதிரைவாலி அரிசி

கைக்குத்தல் அரிசி

சிவப்பு அரிசி

குள்ளகாற் அரிசி

 

பயன்களை பற்றி ஒவ்வோன்றாக இந்த பதிவில் பார்ப்போம்.

கருப்பு கவுணி அரிசி:

அந்தக் காலத்தில் மன்னர்கள் சாப்பிட்ட அரிசி என்று சொல்லப் படுகிறது. புற்று நோய்க்கு எதிராக செயல்படும். இன்சுலின் சுரக்கும்.
கருப்பு கவுணி அரிசியை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு அரைத்து கொதிக்க வைத்து கஞ்சியாக குடிக்கலாம். சாதமாக வடித்தும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி:

நரம்பு உடல் வலுவாகும். ஆண்மை கூடும். நரம்பு தளர்ச்சியை கட்டுப் படுத்தும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாதம் ருசியாகவும், சத்தாகவும் இருக்கும். இதை சாதமாக மட்டும் சமைக்காமல் இட்லி, தோசை மாவு அரைத்தும் பயன் படுத்தலாம். சாம்பார் சாதம், புட்டு , கொழுக் கட்டை போன்ற வற்றையும் செய்து சாப்பிடலாம். சாதம் வடித்த கஞ்சியில் உப்பு , மிளகுத் தூள் சேர்த்து இளஞ் சூட்டில் குடிக்கலாம். பொங்கல் செயாதும் சாப்பிடலாம். வயிற்றுப் புண், வயிறு வலி போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

பூங்கார் அரிசி:

பெண்களுக்கான அரிசிஎன்று கூறப்படுகிறது. காரணம் பெண்களுக்கு தாய்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கு முதலிடம். கர்ப்பிணிகள் பூங்கார் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் சுகப் பிரசவமாகும். இது தவிர குறைந்த அளவிலான நார்ச்ஸசத்து , கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் தயாமின் அதிகமாக உள்ளது
இது குறுகிய காலப் பயிராகும். இது 1980-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காப்பாற்றப் பட்ட அரிசியாகும். ஆம் எல்லா நெல் வகைகளும் தணாணீரில் மூழ்கி அழுகிப் போனாலும் பூங்கார் நெல் மட்டும் அதன் தன்மையை இழக்காமல் அப்படியே இருந்தது. இது கடுமையான மழையையும் வறட்சியையும் தாங்கக் கூடியது. உலர் நிலத்திலும் நன்கு வளரக் கூடிய தன்மை கொண்டது.
பூங்கார் அரிசியை மதிய உணவின் போது சாதமாக சாப்பிடலாம். சாதம் வடித்தும் சாப்பிடலாம். இந்த அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொழுக் கட்டை , இடியாப்பம் செய்தும் சாப்பிடலாம். கஞ்சி செய்தும் சாப்பிடலாம்.
இட்லி செய்ய பூங்கார் அரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து 3:1 என்ற விகிதத்தில் உளுத்தம் பருப்புடன் அரைத்து இட்லி அல்லது தோசை செய்தும் சாப்பிடலாம்.

காட்டுயானம் அரிசி:

பொதுவாகவே சிவப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியம் ஆகும். காட்டாயானம் அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் இயற்கையாகவே உள்ள அந்தோசயனின் எனப்படும் சிவப்பு நிறமியாகும்.காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல வலிமையான எலும்புகள் பெற உதவும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மலச் சிக்கல் போக்கும். சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. சர்க்கரை நோய்க்கு எதிரி என்றே சோல்லலாம். சர்ஙக்கரை நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் கறீயீட்டு உணவு ஆகும். கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது நம் உடலில் இரத்த சர்க்கரையை உயர்த்துவதை அளவிடுவதை கணக்கிட கூடியது.

கருத்தக்கார் அரிசி:

கஞ்சி செய்தும் சாப்பிடலாம். இட்லி, தோசை செய்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்குவதுடன் மூலம் குணமாகும். வெண் புள்ளி, மஞ்சள் காமாலை, சர்க்கரை நோயும் விரட்டக் கூடியது.

காலநமக் அரிசி:

புத்தர் சாப்பிட்ட அரிசி. இந்திய வட மொழியில் கால நமக் எனப் பெயர் பெற்றுள்ளது. புத்தக் காலமான கிமு 6ஆம் நூற்றாண்டு முதலே சாகுபடி செய்யப் பட்டு வந்ததாக கூறப் படுகிறது. இரும்புச் சத்து ஜிங்க் சத்து நிறைந்தது. மனிதனின் முக் குணங்களில் முதன்மையான குணமான சாத்விக் குணத்தை தரவல்லது கால நமக். சிறுநீரகம் , இரத்த புற்றுநோய் மூளை, மற்றும் தோல் சம்பந்தப் பட்ட நோய்களை எதிர்க்கும்.

இரத்தசாலி அரிசி:

இந்த அரிசியை கஞ்சி போல் செய்து தோலில் பிரச்சனை இருந்தால் எடுத்து பூசலாம். கெட்ட கொழுப்பு கரைத்து விடும். கர்ப்பப் பை பிரச்சனை , செரிமானப் பிரச்சனை, சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோய், கிடனி, குடல் சம்பந்தமான நோய்களை போக்க கூடியது.

மூங்கில் அரிசி:

தன் வாழ்நாளை முடிக்கும் போது தன் இனத்தை பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கட்ட தட்ட கோதுமை போல் தோற்றமளிக்கும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்தல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும். வைட்டமின் பி6, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கஞ்சி சாதம் வடித்து சாப்பிடலாம்.

அறுபதாம் குறுவை அரிசி:

இழந்த சக்தியை மீட்டெடுக்கும். எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மூட்டு வலி, பக்கவாதம், இளம் பிள்ளை வாதம், தண்டு வட பிரச்சனை , கழுத்து, எலும்பு தேய்மானம், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். சருமத்திற்கு மிகவும் நல்லது. 60 நாளில் அறுவடை செய்யக் கூடியது. புட்டு,இடியாப்பம், சாதம், கஞ்சி செய்து சாப்பிடலாம்.

இலுப்பை பூ சம்பா அரிசி:

வெளிர் பச்சை நிற வகையான, சிறியதான தானிய வகை ஆகும். லேசான மணம் கோண்டது. சாப்பிட மென்மையானது. பூக்கும் தருவாயில் இலுப்பை பூ வாசம் வருவதால் இது இப்பெயர் பெற்றது. வீக்கம், மூட்டு வலி பிரச்சனைகள் முடக்கு வாதம் பிரச்சனைகளை சரி செய்யும். சாப்பாடு கஞ்சி செய்து சாப்பிடலாம்.

தங்கச் சம்பா அரிசி:

பாரம்பரிய அரிசி வகை ஆகும். பல், இதயம் வலுவாகும். முகப் பொலிவு, தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். உடல் தங்கம் போல் ஜொலிக்கும். இட்லி தோசை செய்து சாப்பிடலாம்.

கருங்குறுவை அரிசி:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இழந்த சக்தியை மீட்டெடுக்கும். கொடிய நோய்கள் குணமாகும். நீரிழிவிற்கு சிறந்தது. இதில் இரும்பு சத்து 4 மடங்கு உள்ளது. Iron, calcium, vitamin A, B,B12,K, புரதசத்து உள்ளது. சாப்பாடு செய்து சாப்பிடலாம்.

கார் அரிசி:

தோல் சம்பந்தப் பட்ட நோய்கள் குணமாகும்.

குடை வாழை அரிசி:

குடலை சுத்தப் படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி பெறும். பலமான உடல் மற்றும் பள பளப்பான தேக அமைப்பு உண்டாகும். செரிமான கோளாறு நீங்கும். சர்க்கரை நோய் வராது.

தூய மல்லி அரிசி:

சிலருக்கு உடம்பில் அதிக அளவு பித்தம்இருப்பதால் அடிக்கடி வாந்தி வரும். இதை தடுக்க தூய மல்லி சாப்பிடுவதால் இந்த பிரச்சனை கட்டுக்குள் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சீரக சம்பா அரிசி:

நார்ச் சத்து மிகுந்தது. புற்றுநோய் எதிர்த்து போராடும். கோழுப்பை கரைக்க கூடியது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. மூளை இதய பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் பிரியாணி சாதம் செய்து சாப்பிடலாம்.

சொர்ண மயூரி அரிசி:

கர்நாடக பாரம்பரிய நெல் வகை . எளிதில் சீரணிக்க கூடியது. 120 நாட்கள் அறுவடை காலம்.

கிச்சலி சம்பா அரிசி:

உடல் எடையைக் குறைக்க கூடியது.type 2 நீரிழிவு நோய் குணமாகும்.உடலுக்கு மனதிற்கும் வலுவையும் தெம்பையும் அளிக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிடும் போது தாய்ப்பால் ஊறும். கிச்சலி சம்பா சாதத்தை வடித்து உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

கருடன் சம்பா அரிசி:

நாம் மறந்து போன பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று. சாதம் வடித்து மதிய உணவில் சேர்த்து கோள்ளலாம். சிறுநீர் பாதை தோற்றுக்கள், கொழுப்பு கரையும். எலும்புகளை பலப்படுத்தும்.

நீலம் சம்பா அரிசி:

இரத்த சோகை சரியாகும். சாதம், கஞ்சி செய்து சாப்பிடலாம்.

குழியடிச்சான் அரிசி:

உப்பு நீரில் விளையக் கூடியது. ஊட்டச் சத்து நிறைந்த உணவாக பயன் படுகிறது. தாய்ப் பால் சுரக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. மலச்சிக்கல் குணமாகும். உடல் மலம் பெறும்.

சேலம் சன்னா அரிசி:

தசை, எலும்பு, நரம்பு மண்டலம் சீராகும்.

பிசினி அரிசி:

பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் பிரச்சனை சரியாகும்.

சூரக் குறுவை அரிசி:

பெருத்த உடல் கூட சிறுத்து அழகு பெறும்.

வாலான் சம்பா அரிசி:

சுகப் பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். ஆண்களுக்கு விந்து அதிகரிக்கும்.

வாடான் சம்பாஅரிசி:
அமைதி கிடைக்கும். நல்ல தூக்கம் வரும்.

திணை அரிசி:
கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எலும்பு, பற்கள் வலிமையடையும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். திணை விரையில் செரிமானமாகும் திறன் கொண்டது. பசியைத் தூண்டும்.

வரகு அரிசி:

இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். இந்த அரிசியை பொங்கல், சாதம் , கஞ்சி, லெமன் சாதம் செய்தும் சாப்பிடலாம். இந்த அரிசியில்இரும்பு சத்து, வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது. சீரான இரத்த ஓட்டம், இதயம் பலப்படும். உடல் பருமன் குறையும். மலச்சிக்கல் போக்கும்.

சாமை அரிசி:

நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச் சத்து கோண்ட தானியம் சாமை. மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. காய்ச்சல் சரியாகும். வயிறு தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.

குதிரைவாலி அரிசி:

வளரும் குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசியை தினசரி உணவாக கொடுத்து வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தசைகள் எலும்புகள் வலுவாகும். சாப்பாடு செய்து சாப்பிடலாம்.

கைக்குத்தல் அரிசி:

கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால் பெருங்குடல் புற்றுநோய் தடுக்கிறது. உடல் எடை குறைக்கிறது.

சிவப்பு அரிசி:

அரிசி வகைகளுள் ஒன்று. எளிதாக ஜீரணிக்க கூடியது. செரிமானக் கோளாறுகள் ஏற்படாது. கழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகள் செயல்பாடு சீராக இருக்கும்.

குள்ளகாற் அரிசி:

பாரம்பரிய அரிசி வகை. இரத்தம் சுத்தமாகும். உடல் எடை குறையும்.

 

பாரம்பரிய அரிசி பற்றிய விழிப்புணர்வு தேவை:

 

அரிசி கடந்த காலத்துடன் ஒரு வளமான கலாச்சார தொடர்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீன அரிசி வகைகளில் இல்லாத ஏராளமான சுகாதார நன்மைகளையும் வழங்குகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பாரம்பரிய அரிசி, செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பங்களிக்கிறது.

அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக ஊட்டச்சத்து அடர்த்தி, குறிப்பாக இயற்கையாகவே தங்கள் ஊட்டச்சத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு, சமச்சீர் உணவுக்கு ஒரு மதிப்புமிக்க கூடுதலாக அமைகிறது. பாரம்பரிய அரிசியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தனிநபர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் தனித்துவமான சுவைகள் இரண்டையும் அனுபவிக்க முடியும், அதே நேரத்தில் நிலையான விவசாய நடைமுறைகளை ஆதரிக்கவும் விவசாய பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் முடியும். பாரம்பரிய அரிசியைத் தழுவுவது ஆரோக்கியமான உணவு மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு படியாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *