முடி உதிர்தல் என்பது அனைத்து வயது, பாலினம் மற்றும் பின்னணியை சேர்ந்த மக்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான கவலையாகும். அது தற்காலிகமாக உதிர்ந்தாலும் சரி அல்லத நாள்பட்டதாக இருந்தாலும் சரி, முடி உதிர்தல் ஒரு நபரின் தோற்றத்தையும் சுயமரியாதையையும் கணிசமாக பாதிக்கும்.
முடி உதிர்தல் என்பது இன்றைய தலை முறையினரின் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்பானது என்றாலும்,
அதிகப்படியான அல்லது அசாதாரணமான முடி உதிர்தல் மரபியல், ஹார்மோன்
ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், மோசமானஉணவுமுறை அல்லது பிற சுகாதார நிலைமைகள் போன்ற அடிப்படை பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
தலைமுடியில் பொதுவாக ஏற்படும் பாதிப்புகள்:
1.முடி உதிர்தல்,
2.இளநரை
3.பொடுகு
4.பேன் தொல்லை
5.அரிப்பு ஏற்படுதல்
1. முடி உதிர்தல்
காரணங்கள்:
முடி உதிர்விற்கு மரபியல் காரணிகள், ஹார்மோன் மாற்றங்கள், மருத்துவ காரணங்கள், மன அழுத்தம் , சத்துக்கள் குறைபாடு,பொடுகு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் முறைகள்.
மரபார்ந்த காரணங்களால் முடி உதிர்ந்தால் அதை சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் , தலையை சுத்தமாக பராமரிப்பு செய்வதன் மூலமும் குறைக்கலாம்.
மருத்துவ முறைகள் காரணமாக முடி உதிர்ந்தால் உதாரணமாக,கேன்சர் ட்ரீட்மென்ட், தைராய்டு ட்ரீட்மென்ட், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் முடி உதிர்வது ஏற்பட்டால் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு சாதாரணமாகவே கொட்டிய முடிகள் மீண்டும் முளைத்து விடும். முட்டை,மீன்,கீரை வகைகள், காய்கறிகள் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் காரணமாக முடி கொட்டுவது ஏற்பட்டால் முடிந்த அளவு டென்சனாவதைக் குறைத்துக் கொண்டு சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் மற்றும் விதைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடியை முழுவதுமாக விரித்து விடுவதால் சிக்குகள் அதிக அளவில் ஏற்படும். அதிக அளவில் இறுக்கி பின்னல் போடுவதும் கூடாது. இதன் மூலம் முடி உதிர்தல் அதிக அளவில் ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்கள் மூலமும் முடி உதிர்வு ஏற்படும். உதாரணமாக குழந்தை பிறப்பு, மெனோபாஸ் காலத்தில் முடி உதிர்தல் ஏற்படலாம்.தலைமுடியை சுத்தமாக பராமரிப்பு செய்வது மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவுகள் உண்பது மனதை இலகுவாக டென்ஷன் இல்லாமல் வைத்துக் கொள்வதன் மூலம் இதை கட்டுக்குள் கொண்டு வரலாம்.தலையில் பொடுகு அதிகமாவதன் காரணமாக முடி கொட்டுவது ஏற்பட்டால் முதலில் பொடுகைக் கட்டுப் படுத்த வேண்டும்.
- தேங்காய் எண்ணெயை சூடாக்கி முடிகளின் வேர்க் கால்கள் வரை படும் படி மசாஜ் செய்ய வேண்டும்.
- சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து அதன் சாற்றை மட்டும் எடுத்து முடிகளின்வேர்க் கால்கள் வரை படும் படி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். பன்பு சீயக்காய் அல்லது மென்மையான ஷாம்பு கொண்டு முடியை அலச வேண்டும்.
- மருதாணி இலைகளை சிறிதளவு எடுத்து அரைத்து முடிகளின்
செம்பருத்தி இலைகளை எடுத்து சாறு பிழிந்து நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து தடவ வேண்டும்
2. இளநரை
காரணங்கள்:
1. சத்துக்கள் குறைபாடு
2.மன அழுத்தம் மற்றும் பதட்டம்,
3.தலைக்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள்
4.புகை பிடித்தல்.
5.மது அருந்துதல்
6 . பித்தம் அதிகமாதல்
7. மரபணு
8. சுற்றுச் சூழல் வெளிப்பாடுகள்,
9. வாழ்க்கை முறை தேர்வுகள்
1. இன்றைய வாழ்க்கைச் சூழலில் உண்ணப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சத்துக்கள் குறைந்தவையாகவும், வேதிப்பொருட்கள் கலந்தவையாகவும்
இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.
தேவையான சத்துக்கள்:
முடி நன்கு வளரவும்,ஆரோக்கியமாக இருக்கவும் புரதம், வைட்டமின் பி,சி,டி, இ , ஃபோலிக் அமிலம் போன்றவையும், இரும்பு, துத்தநாகம், செலினியம்,காப்பர் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்களும் யஅவசியம்.
முடி ஆரோக்கியமாக வளர உண்ண வேண்டிய உணவுகள்:
முட்டை, பீன்ஸ், பசலைக்கீரை,ஓட்ஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு , சூரிய காந்தி விதைகள், கேரட், நட்ஸ் அண்டு ட்ரைஃபுரூட்ஸ்
தொடர் மன அழுத்தம் முடியின் கருமை நிறத்திற்குக் காரணமான மெலனோசைட் உருவாவதைக் குறைக்கிறது.
புகை பிடித்தல் முடியின் பாலிக்கிள்களைச் சேதமடையச்செய்து
இள நரையை ஏற்படுத்துகிறது.
மது அருந்துதல் உடல் உணவில் இருந்து உறிஞ்சி எடுக்கும் ஊட்டச்சத்து அளவைக் குறைக்கிறது.
குறைவான தூக்கம் மற்றும் குறைவான உடல் செயல்பாடு போன்றவையும் இள நரைக்கு காரணமாக உள்ளன.
3.பொடுகு
பொடுகைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள்:
1. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தயிர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து நன்கு கலந்து தலையில் மயிர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்து பத்து நிமிடம் வைத்திருந்து பின் தண்ணீர் விட்டு தேய்த்து கழுவி விட்டு சீயக்காய் அல்லது இயற்கை சாம்பு போட்டு தலையை நன்கு கழுவி விட்டு உலர்த்த வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் பொடுகு நீங்கும்.
2. ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை எடுத்துக் கொண்டு அதன் ஜெல் பகுதியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து அதனுடன் அரை எலுமிச்சை பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் படுமாறு நன்கு தடவி பத்து நிமிடம் வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.பின்பு இயற்கை சாம்பு பயன்படுத்தி கழுவி உலர வைக்க வேண்டும்.இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
4.பேன் தொல்லை
காரணங்கள்:
தலைமுடியை அடிக்கடி குளித்து சுத்தம் செய்யாமல் இருப்பது, மற்றவர் பயன்படுத்திய சீப்பு மற்றும் துண்டு உபயோகிப்பது, பேன் உள்ள நபர்கள் அருகில் படுத்து உறங்குவது ஆகியவற்றின் மூலம் பேன் மற்ற நபர்களுக்கும் பரவுகிறது.
பேன் ஒழிப்பு வழிமுறைகள்.
பூண்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவலாம்
சிறிது வினிகரை தண்ணீர் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
வேப்பிலை அல்லது வேப்ப எண்ணெய் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் பேன் தொல்லை நீங்கும்.
பேன் சீப்பு வைத்து அடிக்கடி சீவினால் பேன் தொல்லை ஒழியும்.
5.அரிப்பு ஏற்படுதல்
தலையில் அரிப்பு ஏற்படக் காரணங்கள்.
செபோர்ஹேயிக் டெர்மாடிடிஸ் , சோரியாஸிஸ், பொடுகு, எக்ஸீமா, பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று,பேன், வறண்ட ஸ்கால்ப்,தலைமுடிக்கு பஸ் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள மூலம் ஏற்படும் ஒவ்வாமை போன்ற பல காரணங்கள் காரணமாக தலையில் அரிப்பு ஏற்படலாம்.
தலை அரிப்பு குணமாக இயற்கை மருத்துவ முறைகள்.
வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொண்டு அதனுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் மயிர்க்கால்களில் படுமாறுநன்கு தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
ஒரு மடல் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கால்ப் நனையும் படி நன்கு தடவி பின்பு கழுவலாம்.
பொடுதலை இலைச்சாறு ஒரு குழிக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி குளிர விட்டு இளம் சூட்டில் ஸ்கால்ப் பில் நன்கு தடவி பத்து நிமிடம் கழித்து கழுவலாம்.
வெள்ளை மிளகு பொடி ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து கழுவலாம்
இஞ்சி சாறும் தேங்காய் எண்ணெயும் சம அளவு எடுத்துக் கலந்து கொண்டு அதை மயிர்க் கால்களில் நன்கு படுமாறு தடவி மசாஜ் செய்து பத்து நிமிடம் வைத்து பின் கழுவ வேண்டும்.
தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும், நீண்டும் வளர சில இயற்கை வழிமுறைகள்.
ஹேர் பேக்
இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் உடன் இரண்டு டீஸ்பூன் பிரஷ் ஆலோவிரா ஜெல் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து நன்கு மஸாஜ் செய்து இருபது நிமிடம் கழித்து கழுவலாம்.
பச்சை கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அதை தலையில் தேய்த்து முப்பது நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவலாம்.
இயற்கை ஹேர் வாஷ் பவுடர்.
சீயக்காய், வெந்தயம், செம்பருத்தி இலை,ஆவாரை இலை,சோப் நட் காய், பெரிய நெல்லிக்காய், சோற்றுக் கற்றாழை ஆகியவை கலந்த இயற்கை ஹேர் வாஷ் பவுடர் தயாரித்து வைத்துக் கொண்டு அதில் தலைமுடியை கழுவலாம்.
இயற்கை மூலிகை ஹேர் ஆயில்.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் மருதாணி, கருவேப்பிலை, கரிசாலை, செம்பருத்தி பூ, இலை,வெட்டி வேர், சின்ன வெங்காயம், வெந்தயம், கருஞ்சீரகம், வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி அதை ஹேர் ஆயிலாக பயன்படுத்தலாம்.
முடிவுரை
முடி உதிர்தல் ஒரு வேதனையான பிரச்சினையாக இருக்கலாம், ஆனால் அதை
நிர்வகிக்கவும், சில சந்தர்ப்பங்களில் முடி உதிர்தலை மாற்றியமைக்கவும் ஏராளமான
சிகிச்சைகள் உள்ளன. பிரச்சனையின் மூல காரணத்தைக் கண்டறிவது சரியான
அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமாகும். மருத்துவ சிகிச்சைகள்,
வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது அழகுசாதன நடைமுறைகள் மூலம்,
பெரும்பாலான தனிநபர்கள் தங்கள் தனித்துவமான நிலைக்கு ஏற்ற ஒரு பயனுள்ள
தீர்வைக் காணலாம். நீங்கள் குறிப்பிடத்தக்க முடி உதிர்தலை அனுபவித்தால்,
ஒரு சுகாதார நிபுணர் அல்லது தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்த
நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவும்.
தீவிர பிரச்சினைகள் இருப்பின் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
நன்றி.