இன்றைக்கு எல்லோருக்கும் தலையாய பிரச்சனை பாத வெடிப்பு ஆகும். உடல் சூடு காரணமாலும் அல்லது தண்ணீரில் அதிக நேரம் நின்று வேலை செய்வதாலும் பாத வெடிப்பு ஏற்படலாம். இதில் பெரும்பாலும் பெண்களே பாதிக்க படுகிறார்கள்.
நீரில் அதிக நேரம் நின்று துணி துவைப்பது, வீடு துடைப்பது போன்றவேலை செய்யும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை இப்படியே விட்டு விட்டால் பின் நாளில் கால்களுக்கு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.
தோல் மற்றும் உடல் பராமரிப்பு என்று வரும் போது பாதங்கள் கவனிக்கப்படுவதில்லை. குறிப்பாக குளிர்காலங்களில் நாம் வெளியே செல்லும் போது பாதங்கள் மூடி இருந்தாலும் பாதங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். அதை அலட்சியம் செய்யும் போது பெரிய சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
அலட்சியமாக இருக்காதீர்கள்:
நம்முடைய மொத்த உடல் எடையையும் தாங்கி, நடப்பதற்கு உதவும் முக்கிய உறுப்பு பாதம். நம் பாதமானது 26 எலும்புகளாலும், 33 இணைப்புகளாலும், 100-க்கும் மேற்ப்பட்ட தசைகளாலும் ஆனது. இது உடலின் முழு பாரத்தையும் தாங்கும் அளவிற்கு இயற்கையிலெயே கட்டமைக்கப் பட்ட உறுதியான அமைப்பாகும்.
நாளடைவில் இந்த தோல் வெடிப்புகள் இரத்த ஓட்டத்தை குறைத்து கால்விரல்களின் நிறத்தை மாற்றலாம். அரிப்பு, சிவப்பு திட்டுகள், வீக்கம் மற்றும் கொப்புளங்கள் காலில் உண்டாகலாம்.
பின் பாதத்தின் அமைப்பு:
கீழ்ப்பாதம் என்பது கணுக்காலும், குதிகாலும் இணைந்த பகுதியாகும். நடுப்பாதத்தின் வளைபாத அமைப்பானது அதிர்வுகளைத் தாங்குவதற்கேற்ப அமைந்துள்ளது. அடிப்பாதம் என்பது குதிகால் எலும்புக்கும் கீழே கொழுப்புப்படிந்த மெத்தென்ற படலத்தால் ஆனது.
முன் பாதத்தின் அமைப்பு:
>>> முன் பாதமானது 5 விரல்கள், நீண்ட நெருக்கமாக அமைந்துள்ள 5 எலும்புகளால் ஆனது. கால் விரல் எலும்புகள்’பாலாங்க்ஸ்’ எனப்படும் பெருவிரலில் 2 பாலாங்க்ஸ் எலும்புகளும், மற்ற 4 விரல்களிலும் தலா 1 பாலாங்க்ஸ் எலும்புகளும் இருக்கும்.
பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது:
தோல் வறட்சியும், அதிக உடல் எடையும் தான் காரணம் . நம் உடலில் நார்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாத வெடிப்பு ஏற்படும். குளிர் காலத்தில் இயல்பாகவே தோல் வறட்சி ஏற்ப்பட்டு பாத வெடிப்பு ஏற்படும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும்.
அதற்கு கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் , அந்த அடுக்கு இடம் மாறி தோலில் வெடிப்பு ஏற்படும்.
பாத வெடிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்:
- வெளியிடங்களுக்கு ஒருபோதும் வெறுங்காலுடன் செல்லாதீர்கள்.
- கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்து அணியுங்கள்.
- கால் விரல்நகங்களை வாரம் ஒருமுறை வெட்டுங்கள்.
- சூடான பகுதிகளுக்கு அருகில் பாதங்களை வைக்காமல் இருக்க வேண்டும்.
- ஆண்கள் புகை பிடிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. பாதத்தில் ரத்த ஓட்டம் குறைகிறது.
- கால்விரல்கள் மற்றும் கால் விரல்களுக்கு நடுவிலுள்ள பகுதிகளை தினமும் சுத்தம் செய்து, ஈரமில்லாமல் நன்றாக துடைக்க வேண்டும்.
- சிலருக்கு வறண்ட சருமப் பிரச்சனை இருக்கும். அவர்கள், தங்கள் பாதங்களையும் குதி. கால்களையும் ஈரப்பதமாக வைத்திருப்பது நல்லது.
- பாதங்களில் சிறிய வெட்டுக்கள், கொப்புளங்கள், தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
- சர்க்கரை நோயால், பாதத்தில் ஏற்படும் பாதிப்புகள், சிலருடைய காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் விடுகிறது. எனவே நீரிழிவு விசயத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்.
- பாதங்களின் பின்பகுதியை அடிக்கடி கவனித்து கொள்ளுங்கள். ஏதேனும் புண்கள் , கொப்புளங்கள் ஏதேனும் உள்ளதா என பசரிசோதியுங்கள்.
- படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் பாதங்களை , மிதமான வெந்நீரில் கழுவுங்கள். இதனால் பாதத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
- ஷீ அணியும் போது காட்டன் காலுறைகளை பயன்படுத்துங்கள்.
- நல்ல காற்றோட்டமான செருப்புகளையும் ஷீக்களையும் அணியுங்கள். இதனால் உங்கள் கால்களில் புண்கள் ஏற்படாது.
- பாதத்தில் ஏதாவது புண்கள் ஏற்ப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.
பாத வெடிப்பு குணமாக சிகிச்சைகள்:
- வாசலின் 1 ஸ்பூன், லெமன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து பாதத்தில் போடவும் பின்பு பாதங்களை வெது வெதுப்பான நீரில் காலை வைத்து 20 முதல் 25 நிமிடம் கழித்து கழுவவும். இதை இரவில் தூங்குவதற்கு முன் செய்யவும்.
- கண்டங்கத்தரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெயில் காய்ச்சி பூசி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
- பப்பாளி பழத்தை அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். பின்பு அவை உலர்ந்ததும் நீரில் நன்றாக கழுவ வேண்டும்.
காலில் ஆணி ஏற்படுவதற்கான காரணங்கள்:
காலில் ஆணிஏற்படுவதற்கு காரணம் கிருமிகள் ஆகும். மேலும் அதிகப்படியான அழுத்தத்தால் வளரக் கூடிய இறந்த செல்களின் தொகுப்பு ஆகும்.
பாதத்தில் ஆணிப் பிரச்சனை வந்தால் முதலில் அழுத்தம் தருவது போலிருக்கும்.கவனிக்காமல் விட்டால் பாதத்தை ஊன்ற முடியாத அளவிற்கு வலியைத் தரும். கால் ஆணியின் முதல் அறிகுறியாகப் பாதத்தின் தோல் பகுதி கடினமானதாக மாறும்.
கால் ஆணி பிரச்சனையால் பாதிப்புக்கு உள்ளான பகுதியை ‘ சுய மருத்துவம்’
செய்து ஆணியை கீறி எடுக்க கூடாது. இதனால் தொற்று பாதிப்பு வரலாம். பாதங்களின் இதர பகுதிகளிலும் பரவி பாதிப்பு தீவிரமடையலாம்.
கால் ஆணி குணமாக சில சிகிச்சைகள்:
- எருக்கம் பாலை எடுத்து கால் ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து 3 நாட்கள் வைக்கலாம்.
- தேங்காய் எண்ணெய்யை கொதிக்க விடுங்கள். அதில் கட்டி கற்பூரத்தைப் போட்டு கரைய விடுங்கள். இதை ஆற விட்டு ஆணி உள்ள இடத்தில் வையுங்கள். இதை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் செய்தால் கால் ஆணி காணாமல் போகும்.
- பொறுத்துக் கொள்ள முடியாத வலி, நடப்பதில் சிரமம் எனப் பாதிப்பு தீவிரமடையும் முன்பே மருத்துவரை அணுகுவது நல்லது.
பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது:
கால்களுக்கு வரும் பல பிரச்சனைகளில் ஒன்று , பாத எரிச்சல்’. வைட்டமின் பி12 குறைபாடு, ஃபோலேட் கறைபாடு இருப்பவர்களுக்கும், மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கும், உடலின் சர்க்கரை அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு ‘பாத எரிச்சல், ஏற்ப்படும்.
பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் தான் பாத எரிச்சல் ஏற்படுகிறது. உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானாலும் நரம்புகள் பாதிக்கப் பட்டு பாத எரிச்சல் ஏற்படக்கூடும்.
முடக்கு வாதம் தோற்று, சீறுநீரகச் செயலிழப்பு , ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்ட பல காரணங்களாலும் நரம்புகள் சேதமடையலாம். இதன் தோடரச்சியாகத்தான் பாத எரிச்சல் வரக் கூடும்.
பாத எரிச்சலுக்கான சிகிச்சைகள்:
- தேங்காய் எண்ணெயுடன் வாசலின் கலந்து பாதத்தில் தடவும் போது பாத எரிச்சல் குணமாகலாம்.
- வைட்டமின் ‘பி3’ நிறைந்த உணவுகளை உட்கொண்டால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். ஆகவே முழு தானியங்கள், பச்சைக் காய் கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக சில யோசனைகள்:
நமது உடம்பின் ஒட்டு மொத்த எடையையும் தாங்கி நிற்கும் அமைப்பாகும். பாத வெடிப்பு, பாத எரிச்சல் ஆகியவற்றை அலட்சியம் செய்து விட்டால் நடக்க முடியாமல் போகலாம். அடிக்கடி நமது பாதங்களை பராமரிக்க வேண்டும்.
பெடிக்குயூர் போன்ற மசாஜ்களை எடுக்க வேண்டும். வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். எனவே, பாதங்களைப் பராமரிக்கும் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காதீர்கள்.