Glow up tips for girls in tamil அழகு குறிப்புகள்:

அனைத்து பெண்களுமே நாம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக அழகு நிலையத்தை தேடி ஓடுவார்கள். அதற்காக நிறைய செலவு செய்வார்கள். ஆனால் அதனால் பின் விளைவுகளைத் தான் சந்திப்பார்கள். இயற்கையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நம் அழகை கூட்டிக் கொள்ளலாம். ஆனால் அழகு என்பது தயாரிப்புகளைப் பற்றியது மட்டுமல்ல; அது மனநிலையைப்பற்றியது. உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கவும், நினைவாற்றலைப் பயிற்சி செய்யவும், அழகு தேவை.

எனவே சில அழகு குறிப்புகள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் கொடுத்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள்.

முகம் இளமையாகவும் சுருக்கம் வராமலும் இருக்க:

முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு 1ஸ்பூன் ஆளிவிதை பொடியுடன் 1/2 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து 1ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவலாம்.வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

 

முகம் பளபளக்க:

 

ஒரு பௌலில் சிறிதளவு காய்ச்சாத பால் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சை நனைத்து முகத்தில் நன்கு தடவி விடவும்.10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

முகம் ஃபரஷ்சாக மாற:

அரிசி கழுவிய தண்ணீர் முகத்தை ஃப்ஷ்சாக மாற்றும். சமைக்கும் அரிசியை நன்கு கழுவி, ஊற வைத்த பிறகு அரிசியை வடிகட்டவும். ஒரு பருத்தி துண்டை பயன்படுத்தி உங்கள் முகத்தில் தடவவும். கரம்புள்ளி உள்ள இடத்தில் தடவவும். பின் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

1ஸ்பூன் கடலை மாவுடன் 1ஸ்பூன் தக்காளி ஜுஸ் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் உடனே ஃப்ரெஷ்ஷாக மாறும்.

 

முகப்பரு நீங்க:

1டீஸ்பூன் துளசி இலைப் பொடி மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மற்றும் கரும்புள்ளி மறைந்து போகும்.

1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்துமுகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து ஈர துணியில் துடைக்க வேண்டும். ஆவி பிப்பதன் மூலமும் முகத்தில் உள்ள அழுக்கு பருக்கள் நீங்கும்.

சிறிதளவு புதினா இலைகளை எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் மறையும்.

ஐந்து பல் பூண்டு எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் தோன்றும் பருக்கள் குறையும்.

சிறிதளவு வேப்பிலை இலைகளை எடுத்துக் கொண்டு அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மூலம் உண்டான கருமை மறையும்.

ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதில் சிறிது எடுத்து நீரில் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

சிறிதளவு சமையல் சோடாவை நீரில் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் மூலம் உண்டான வலி குறையும்.

 

முகத்தை பொலிவாக்க:

 

காபி தூளுடன் தக்காளி ஜீஸ் கலந்து 10 நிமிடம் வைக்கவும். பின்பு இந்த கலவையை முகம், மற்றும் கழுத்து பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

அரிசி மாவுடன் பால் சேர்த்து கலந்து மசாஜ் செய்யும் போது முகம் பொலிவாகும்.

எலுமிச்ச சாறுடன் சர்க்கரை மற்றும் காபி பவுடர் சேர்த்து முகம், மற்றும் கழுத்து பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.

பீடரூட் சாறு மற்றும் அரிசி மாவு கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவாகும்.

தேனுடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கலந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பொலிவாகும்.

பப்பாளி கூழ் மற்றும் தேன் சம அளவு கலந்து மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவவும் இதனால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும். முகச் சுறுக்கம் நீங்கும்.

 

வறண்ட சருமம் பொலிவாக:

தயிர் 2 டீஸ்பூன் , தேன் 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

உளுந்து , தக்காளி, ஆரஞ்சு ஜீஸ், தயிர், மஞ்சள் தூள் மற்றும் காபி பவுடர், ஆகயவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கவும். 10 நிமிடம் கழித்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் போட்டு 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

 

முகச் சருக்கம் நீங்க:

எள்ளு சாறு மற்றும்பயத்த மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வர வேண்டும். இதனால் வயதான தோற்றம் மற்றும் முகச் சுறுக்கம் நீங்கும்.

கோதுமை மாவுடன் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தொடர்ந்து முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் முகச்சுறுக்கம் நீங்கும்.

பால், எலுமிச்சம் சாறு, கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் பூசி வர முகச் சுறுக்கம் நீங்கும்.

பப்பாளி, கற்றூலை ஜெல் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி வர முகச்சுறுக்கம் நீங்கும்.

வெள்ளரி , கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி ஜூஸ் கஸந்து முகத்தில் பூசி வர முகச் சுறுக்கம் நீங்கும்.

 

சருமத்தை மென்மையாக்க:

 

  • தினமும் ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
  • எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு பேக் முகத்தில் வாரத்தில் இருமுறை போட வேண்டும்.
  • தினமும் பீட்ரூட், ஆப்பிள், காரட் சேர்த்து ஜூஸ் குடிக்க வேண்டும்.

வறண்ட சருமத்தால் கவலையா? கவலை வேண்டாம். இதோ சில குறிப்புகள்:

பன்னீர் திரவம்:

‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் பன்னீர் திரவம், சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இது பி எச் அளவை சரி செய்கிறது. இதனால் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

வெண்ணெய்ப் பழம்:

அவகேடா எனப்படும் வெண்ணெய் பழத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. வைட்டமின்களும் உள்ளன. இந்தப் பழம் சருமத்துக்கு ஊட்டம் அளிக்கிறது.

இயற்கையான மாய்சரைசராக செயல்படுகிறது. வறண்ட சசருமத்திற்கு நல்ல பலன் தரும். வயதான தோற்றத்தைக் கறைக்கும். இந்தப் பழத்தை உங்கள் முகத்திலும் உடலிலும் நேரடியாக பயன்படுத்தலாம்.

முடிவுரை:

அழகு என்பது வெறும் சரும ஆழத்தை விட அதிகம் – அது உள்ளேயும் வெளியேயும் நீங்கள்
எப்படி உணர்கிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பாகும். இந்தப் பதிவு முழுவதும், உங்கள்
இயற்கையான பளபளப்பை அதிகரிக்கவும், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும்,
உங்கள் தனித்துவமான அழகைத் தழுவிக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்ட பல்வேறு
குறிப்புகளை நாங்கள் ஆராய்ந்துள்ளோம்.

சருமப் பராமரிப்பு சடங்குகள், ஒப்பனைநுட்பங்கள் அல்லது சுய பராமரிப்பு நடைமுறைகள் மூலம் எதுவாக இருந்தாலும்,  உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியம். நினைவில் கொள்ளுங்கள், அழகு என்பது முழுமையைப் பற்றியது அல்ல; அது நம்பகத்தன்மையைப் பற்றியது.

நீங்கள் உங்களை எப்படி சுமந்து செல்கிறீர்கள், நீங்கள் அணியும் புன்னகை மற்றும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் காட்டும்  அன்பு. உண்மையான மந்திரம் நன்றாக உணருவது, உங்கள் சருமத்திற்கு கருணைகாட்டுவது மற்றும் உங்கள் தனித்துவத்தைக் கொண்டாடுவது ஆகியவற்றில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *