இயற்கை நமக்கு அற்புதமான மூலிகைகளை வழங்கியுள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். ஆயுள் அதிகமாகவும் வாழ்ந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் இவை மக்களால் அறியப்படவில்லை. ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடுகின்றனர். ஆயிரக்கணக்கில் செலவும் செய்கின்றனர். சில ஆரோக்கிய மூலிகைகளைப் பற்றி காண்போம்.
நெல்லிக்காய்:
- நெல்லிக்காயை காய கல்ப மூலிகை என்றே சொல்லலாம். நரை, திரை, மூப்பு விலக்கும் அற்புதம் நிறைந்தது.
- நெல்லிக்காயை எந்த வடிவத்தில் மாற்றினாலும் வைட்டமின் சி இழப்பு ஏற்படுவதில்லை. காய வைத்தாலொ, வேக வைத்தாலோ கூட அதன் வைட்டமின் சி அப்படியே இருக்கும்.
- தினம் ஒரு நேல்லிக்காய் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகள் வராது.
- நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
- நெல்லிக் காய்க்கு கொழுப்பை விரட்டும் குணமும் உண்டு என்பதால் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் கொழுப்பு கரையும்.
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் உண்டு.
- இன்று வயது வித்தியாசமின்றி, எல்லாப் பெண்களையும் பாதிக்கிற பிரச்சனை அனீமியா என்கிற இரத்த சோகை. இரத்த சோகையை விரட்ட இரும்புச் சத்து அவசியம். ரத்த சோகைக்கும் நெல்லிக் காய் நல்ல மருந்து.
மராட்டி மொக்கு:
- இந்திய மசாலா பொருட்களில் முக்கிய அங்கம் வகிப்பது மராட்டி மொக்கு. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
- இம்மரத்தின் மொட்டுக்கள் மட்டுமல்ல, பிற பாகங்களும் பல்வேறு வகையில் மருத்துவ குணங்களை உள்ளது. இம்மரத்தின் பட்டையானது காலரா நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன் படுகிறது.
- தளிர்கள் கசாயமாக, அண்ணத்தின் புண்களுக்கு சிகிச்சை அளிக்க பயன் படுகிறது.
- இம் மொட்டுகளில் அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும், ஆஸ்துமா மருந்தாகவும், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தவும் பயன்படுத்த படுகிறது.
திருநீற்றுப் பச்சிலை:
- திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு பிழிந்து அந்தச் சாற்றை கட்டியின் மேல் பூசிவர, கட்டி குறைந்து விடும். பழுத்து உடையும். கட்டி உடைந்து சீல், இரத்தம் வெளியேறும். அதன் பிறகும் இதே மருந்தை போட்டுவர புண் ஆறும்.
- திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து 1/2 டம்ளர் சாற்றுடன் பசும் பால் கலந்து காலையில் ஒரு வாரம் கொடுத்து வர வெட்டைச் சூடு தணியும். குளிர்ச்சி உண்டாகும்.
விஷ்ணு கிரந்தி:
- இது வறட்சியான பிரதேசங்களில் அதிக அளவில் வளர்கின்ற ஒரு சிறிய செடி. தும்பை இலையைப் போன்ற இலையுடன் நீல நிறத்தில் பூக்கும்.
- தண்டவாளங்களில் கொட்டப் பட்டுள்ள கற்களின் இடையே இவை வளர்ந்திருக்கும். இதனை , அபராசி’ என்றும் கூறுவர்.
- விஷ்ணுகிரந்தி இலையை கைப்பிடியளவு சட்டியிலிட்டு அடுப்பில் வைத்து வதக்கி, ஒரு டம்ளர் நீர் விட்டு பாதியளவுக்கு காய்ச்சி காலை மாலை குடித்து வர வயிற்றுப் போக்கு நின்று விடும்.
- கைப்பிடியளவு விஷ்ணுகிரந்தியுடன், வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்து கொடுத்து வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். இளமை துள்ள வீரியத்தையும் வாரி வழங்கும்.
தும்பை செடி:
- தும்பைச் சாறு ஒரு கரண்டி, சிறிது மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
- தலை பாரத்துக்கு தும்பை சாறு எடுத்து துணியில் நனைத்து பற்று போட தலை பாரம் குறையும்.
- தும்பை செடியை இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த, தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
- தும்பைப் பூவை காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊறவிட்டு குழந்தைகளுக்கு கொடுத்து வர சளித் தொல்லை தீரும்.
பிரண்டை செடி:
- எலும்பு தேய்மானத்திற்கு மிக அருமையான உணவு பிரண்டை கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
- வாயு தொல்லை , ஜீரண கோளாறு, குடல் புண் சரியாக பிரண்டை துவையல் வாரத்திற்கு. இரண்டு முறை செய்து சாப்பிடலாம்.
- நீரிழிவு நோயாளிகள் இந்த பிரண்டையை துவையலாகவொ, ரசமாகவோ செய்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
- பிரண்டையை தொடர்ந்து பயன் படுத்தி வர மூல நோய் குணமாகும்.
ஆவாரம் பூ:
- ஆவாரம் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டு வலி, அதிக தாகம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. ஆவாரம் பூ கசாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல மருந்து.
- ஆவாரம் பூ நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த பயன் படுகிறது.
- ஆவாரம் பூ சருமத்தில் உள்ள கருமை நீங்கவும், முகப்பரு, தேமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- ஆவாரம் பூ செரிமான அமைப்பைச் சுத்தப் படுத்தவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
துளசி:
- துளசி இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்கிறது.
- சளி, இருமல், தொண்டை வலி மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
- துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு. சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
சோற்றுக் கற்றாழை:
- கற்றாழை ஜீஸ் உடல் எடையைக் குறைக்கிறது.
- நெஞ்செரிச்சலைப் போக்குகிறது.
- மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
- சருமத்திற்கு அழகு சேர்க்கிறது.
- சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- காயங்களை குணப்படுத்துகிறது.
- மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
பொன்னாங்கண்ணி :
- கண் பார்வைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- உடல் வலிமை பெறவும், சுறுசறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
- பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, நெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிஙரிக்க உதவுகிறது.
- காச நோய், இருமல், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது
உடல் இரத்தம் தூய்மை அடையும். உடலின் சூடு தணிந்து கண் பார்வை துலங்குகிறது.
நிலவேம்பு:
- நிலவேம்புக் குடிநீர் காய்ச்சல் மற்றும் நீர்க் கோவை போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- நிலவேம்பு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
- இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தை ஜொலிக்க செய்கிறது.
அருகம் புல்:
- அதிக சூட்டினால் வரக் கூடிய சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, வயிற்றுப் புண்ணுக்கு நல்லது.
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும்.
- அருகம்புல் சாறை காயம் கண்ட இடத்தில் பூசி வர அதிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். புண் மீது தடவ புண் சீக்கிரம் ஆறும்.
- ஒரு கைப்பிடி அருகம் புல்லுடன் விரலளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி, சொறி, சிரங்கு, படர் தாமரை, வேர்க் குரு, வேனல்ஷகட்டி நாள் பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.
தூது வளை:
- சளி, இருமலைப் போக்கும். ரசமாக செய்தும் சாப்பிடலாம். தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
- தூதுவளை இலைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வர ரத்த சோகை சரியாகும்.
- கண் எரிச்சல், கண் வலி , பார்வை குறைபாடுகளுக்கு தூதுவளை நல்ல தீர்வாக அமையும்.
பாம்பு கடித்தால் நல்ல மருந்தாக பயன்படுகிறது. - தூதுவளை புற்று நோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட மூலிகையாகும்.
- தொண்டை வலி குணமாகும்.
பூலாங் கிழங்கு:
- இஞ்சி, பூலாங்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து தேன் கலந்து சுண்டைக் காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்.
- வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, காய்ச்சல் போன்றவை நீங்கும். வாத வலிகள் விலகும்.
- சரும நோய்கள், வியர்வை நாற்றம், உடல் வலி என பலவற்றிற்கும் தீர்வாகும்.
கற்பூர வல்லி/ ஓமவல்லி:
- கற்பூர வல்லி இலையை காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அஜீர கோளாறுகள் நீங்கும்.
- ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.
பூனை மீசை:
- சிறுநீரகத்தின் பாதுகாவலன் என்றே சொல்லலாம். அனைத்து சிறு நீரகப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
ஆடாதோடை:
- ஆடாதோடை இலைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவை நீங்கும்.
- ஆடாதோடை நுரையீரல் பாதை தொற்றுகளைப் போக்க உதவுகிறது.
- ஆடாதோடை கர்ப்பப்பையை வலுவூட்ட உதவுகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவித்த பின் உதிரப்போக்கு குறைய ஆடாதோடை உதவுகிறது.
நொச்சி இலை:
- இந்தக்கீரையை “நுரையீரலின் பாதுகாவலன்” என்று சொல்லலாம். சுவாசப்பாதையை சீராக்குவதில் இந்த இலைகளுக்கு பெரும்பங்கு உண்டு. காரணம், சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை போன்ற பிரச்சனைகளைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.
- ஆஸ்துமாவைகூட இந்த இலைகள் விரட்டக்கூடியது.. மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை, நொச்சி இலைகளுடன் வைத்து மென்று தின்றாலே ஆஸ்துமா குணமாகும்.
நஞ்சு முறிஞ்சான்:
- விசப் பூச்சிகள் மற்றும் எவ்வகையான விஷமும் உடலில் சென்று அதனால் ஏற்படும் கோளாறுகளை போக்க நஞ்சு முறிஞ்சான் பயன்படுகிறது.
- நஞ்சு முறிஞ்சான் கொடியை வேருடன் எடுத்து, கழுவி நறுக்கிக் காய வைத்து, அத்துடன் மிளகையும் சேர்த்து இடித்து, சலித்து சீசாவில் வைக்கவும்.
- இதை காலை, மாலை 1/2 ஸ்பூன் எடுத்து தேன் சேர்த்து கொடுத்து வர எந்த வகையான நஞ்சும் முறிந்து விடும்.
தழுதாழை:
- தழுதாழை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.
- தழுதாழை, காது வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. தழுதாழையின் சாற்றை காதில் சில துளிகள் விடலாம், இது வலியை குறைக்கும்.
- மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.
மருதம் பட்டை:
- மருதம் இதயத்துக்கு சிறந்த பாதுகாவலனாக செயல்படக்கூடியது. ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதை கட்டுப்படுத்தமுடியாத போது மருதம் மரத்தின் பட்டையை பொடித்து குடித்துவந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
- மருதம் பட்டை ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய தசைகளை வலுவடைய செய்கிறது.
- சிறுநீரக கற்கள் வரக்கூடிய வாய்ப்புகளை குறைக்க மருதம் பட்டை உதவுகிறது.
- மருதம் பழங்கள் புண் மற்றும் காயங்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.
மாசிக்காய்:
-
மாசிக்காய் கருப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கி, கருப்பை பலப்பட உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு அதிகம் இருந்தால், மாசிக்காய் அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டையும் இழைத்து எலுமிச்சை சாறு கலந்து தடவினால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.
வெட்டு காய பூண்டு:
- வெட்டு காய பூண்டின் இலைகளை அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு போன்ற காலங்களில் தடவினால் சீழ் பிடிக்காமல் விரைவாக ஆறும்.
- இது புண்ணை ஆற்றும். கபத்தை போக்கும்.
- ரத்த ஒட்டத்தை சீராக்கும். மூச்சுக்குழாய் சிரை, மூக்கடைப்பு, இருமல், நீர்க்கோர்ப்பு, வயிற்றுப் போக்கு, பேதி போன்றவற்றை நீக்குகிறது.
சாரணை கீரை அல்லது மூக்கிரட்டை கீரை:
- சாரணை கீரை, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.
- குடல் புண்களைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
- இது பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கிறது.
கரிசலாங்கண்ணி:
- மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
- வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.
- கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, பொடுகு, முடி வறட்சி போன்றவற்றில் இருந்து முடியை பாதுகாக்கிறது.
- கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள நிறமிகள், முடி நரைப்பதை தாமதப்படுத்தும்.
கீழாநெல்லி:
- கீழாநெல்லி கல்லீரலைச் சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வதற்கும், சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும் கீழாநெல்லி உதவுகிறது.
- வயிற்றுப் புண்கள் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்க கீழாநெல்லி உதவுகிறது.
- கீழாநெல்லியின் வேரை பசும்பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.
இந்த மூலிகைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஒவ்வோருவருக்கும் ஒரு உடல் நிலை இருக்கும். எனவே மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுவது சிறந்தது.