எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் இளமையாக இரூக்கத் தான் ஆசை. ஆனால் 40 வயதை தாண்டியவுடன் வெள்ளை முடி எட்டிப் பார்க்கும் . நோய்களும் தொந்தரவு பண்ணும்.இதனால் மன அழுத்தம் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
இளமையைத் தக்க வைக்க செய்ய வேண்டியவை:
40 வயதை எட்டியவுடன் முகத்தில் சுருக்கங்கள் வரும். வாழ்க்கையில் குழப்பங்கள் வரும். எனவே மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். யோகா தியானம் போன்றவற்றில் மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து விடுபட ஏதாவது துணி தைப்பது, எம்பிராய்டரி போடுவது என செய்து கொண்டே இருக்க வேண்டும்.
தூக்கத்தை குறைப்பது:
சில பெண்கள், வேலை, பொறுப்பு என்று கூறி, தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தற்போதுஇரவில் செல்போன், கணிணியில் நேரத்தைக் கழிப்போரின் எண்ணிக்கையும் அதிகம்.
இவ்வாறு தூக்கத்தை குறைப்பது, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மையானது இயற்கையான பழுது பார்க்கும் செயல்முறைகளை சீர்குலைக்கிறது. சமூகத்தின் நெகிழ்ச்சித் தன்மையை இழக்கச் செய்யும். மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. இது நச்சுக்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலவீனப் படுத்துகிறது.
எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
மதுப் பழக்கம்:
அதிகம் மது உட்கொள்வது ஒருவரின் வயதை கூட்டும். இது சருமத்துக்கு நீரிழப்பை உண்டாக்குகிறது. வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கொலாஜன் உட்பத்தியைக் குறைக்கிறது. இந்த காரணிகள், சுருக்கங்கள், மந்தமான மற்றும் சீரற்ற தோல் தன்மைக்கு வழி வகுக்கும்.
நீரிழப்பு:
போதுமான தண்ணீர் குடிப்பது, சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் வழி, நீரிழப்பு, உயிரியல் முதுமையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது 7 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி இல்லாமை:
உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக தோல் பிரகாசம் அதிகரிக்கிறது. வழக்கமான உடற் பயிற்சியானது ஆரோக்கியமான, அதிக சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது. மாறாக, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் போன்ற பல உடல் நவப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
புகை பிடித்தல்:
புகைப் பிடிப்பதால் நமது உடலில் ஏற்படும் தீங்கான விளைவுகள் ஏற்படுகின்றன. அதன விளைவுகள் வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அழற்சியாகிறது. சுருக்கங்கள், கோடுகள் மற்றும் மந்தமான நிறத்தை உருவாக்குகிறது.
சூரிய வேளிச்சத்துக்கு உட்படுதல்:
சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு தொடர்ந்து உட்படுவது நமது சருமத்தின் நேகிழ்ச்சி தன்மையை அழிக்கிறது. இதனால் அது சுருக்கங்கள், தோய்வுகளுக்கு ஆளாகிறது. இது மட்டுமல்லாமல் இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்களை நீண்ட நேரம் எதிர் கொள்வது, தோல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
மன அழுத்தம் :
மன அழுத்தம் என்பது முதுமைக்கு ஒரு வேகமான வழியாகும். இது உடல்நல பாதிப்புகளுக்கு அப்பால் சருமத்தையும் மங்கச் செய்யும். சரும செல்களை முன் கூட்டியே முதிர்ச்சி அடையச் செய்யும். எனவே, தியானம் யோகா அல்லது பொழுது போக்குகள் மூலம் இளமைப் பொலிவையும், உயிர்ச் சக்தியையும் அப்படியே வைத்திருக்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்:
உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை இழந்து, தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஏற்றுவதன் மூலம் வயதாகும் வேகத்தை கூட்டும். ஊட்டச் சத்து பற்றாக்குறை , தோலின் வயதை துரிதப் படுத்துகிறது
சீரான, ஊட்டச் சத்து நிறைந்த உணவை ஏற்றுக்கொள்வது இளமையைக் காக்கும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
- செய்ய வேண்டிய செயலுக்கு தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காய்கறிகள், கீரைகள் 400கி வரை எடுத்துக் கொள்ளலாம்.
- பழங்கள் 300கி வரை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொள்வது நல்லது.
- கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எலும்புகள் தேய்மானத்தில் இருந்து தப்பிக்க முடியும். பால், ராகி, கீரை வகைகள், மீன், நண்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- புரதம், வைட்டமின், மினரல்ஸ் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பசும் பால் குடிக்கலாம். கொழுப்பு குறைவான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
- நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 2 1/2 லி தண்ணீர் குடிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
- நேரம் தவறி சாப்பிட கூடாது. சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் சாப்பிட வேண்டும்.
- காபி, டீ போன்றவற்றை தவிர்க்கவும். கீரீன் டீ குடிக்கலாம்.
- இனிப்பு பண்டங்களைத் தவிர்க்கவும். அப்போது தான் சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் ஆகியவற்றிலிருந்து தவிர்க்கலாம்.
- உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உடல் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும்.
புத்துணர்ச்சியுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்:
- சூரியகாந்தி விதையை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை தினமும் சாப்பிடும். போது, இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு குறையும். மன அழுத்தம் நீங்கி நன்றாக தூக்கம் வரும்.
- கைக்குத்தல் அரிசி, கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது மன அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
- தினமும் இரண்டு பெரிய நெல்லிக் காய் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
மாத விடாய் நிறுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றம்:
40 வயதிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான மாற்றங்களுள் முதன்மையானது மாதவிடாய் நிறுத்தம். இதனால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் ஏற்படும்
மெனோபாஸ் அடையும் நிலையில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைப் பற்றி அறிவியல் ரீதியாகத் தெரியாவிட்டாலும், அவளுக்கு அப்போது தனது உணர்ச்சிகளில் ஒரு அசாதாரண ஏற்ற இறக்கமும், சீரற்ற தன்மையும் இருக்கும்.
தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கடும் கோபம் இருக்கும். எப்போதும் ‘ சிடு சிடு’ வென இருப்பாள். அதனால், அவளைப் புரிந்து கொண்டு, அவளுக்கு அனுசரனையாக இருக்க வேண்டும்.
இதய நோய் மற்றும் இருதய ஆரோக்கியம்:
இதயம் ஆரோக்கியமாக இருக்க எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 40 வயதிற்கு பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்பக ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய்:
மார்பகங்களை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மார்பகங்களில் வலி வரும். கட்டி இருக்காது மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெறலாம்.
சின்ன கட்டிகள் வரலாம். புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய கட்டிகள் தானாகவே கரைந்து விடும். சந்தேகமாக இருந்தால் மருத்துவரின் உதவியை நாடலாம்.
எலும்பு ஆரோக்கியம்:
40 வயதிற்குப் பிறகு எலும்புகள் தேய்மானம் அடையத் தொடங்கி விடுகிறது. இதன் காரணமாக முதுகு வலி, முழங்கால் வலி போன்றவை தலைதூக்கி விடுகிறது.
எனவே எலும்புக்கு வலுவாகும் கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால், பால் சார்ந்த பொருட்கள், கீரைகள், எள்ளு, கேழ்வரகு, மீன் , வெண்டைக்காய் மற்றும் முட்டை ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இவற்றை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு தேய்மானத்தில் இருந்து விடுபடலாம்.
உடல் எடை மற்றும் உடல் பருமன்:
40 வயதிற்கு மேல் உடல் எடையில் மிக மிக கவனம் செலுத்த வேண்டும். உடல் எடை அதிகம் ஆனால் இலவச இணைப்பாக நிறைய நோய்களும் தொற்றிக் கொள்ளும்.
கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ‘டயட்’ என்ற பெயரில் சாப்பிடாமல் இருக்க கூடாது. அப்படிச் செய்யும் போது சரிவிகித உணவு கிடைக்காமல், உடலுக்க தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடக் கூடும். மாறாக உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.
புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சர்க்கரை படு வேகமாக இரத்தத்தில் கலக்கும் உணவுகளைத் தவிருங்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல. 40 வயதைக் கடந்தவர்களுக்கும் தான். சிறு தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சிறு தானியங்களில் சர்க்கரை வேகமாக ஏறாது. சாதத்தில் சர்க்கரையை வேகமாக எடுத்துக் கோள்ளும்.
காலை உணவாக ஒரு கப் சண்டல், ராஜ்மா, பாசிப் பருப்பு, அனைத்து காய்கறிகளின் சூப் சாப்பிடலாம். புரதம் நிறைந்த உணவுகளான முட்டை, பாதாம் பருப்பு, நிலக்கடலை எடுத்துக் கொள்ளலாம்.
பழ வகைகளில் ஆப்பிள், கொய்யாப் பழம், செவ்வாழை பன்னீர் திராட்சை போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவாக சிவப்பரிசி, வரகரிசி, கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாம்.
இந்த அரிசிகளின் நிறத்தில் உள்ள லேக்டோனசனின் என்ற நிறமி புற்று நோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
இரவு உணவை 6.30 முதல் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்.மிதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமான உணவை எடுத்துக் கொண்டால்அஜீரணம் ஏற்படலாம். இரவில் எப்போழுதும் குறைவாக சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு 4 கிராம் உப்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் 8 கிராம் உப்பு சாப்பிடுகிறோம். ஊறுகாய், தொக்கு சாப்பிட கூடாது. கசப்பையும் துவர்ப்பையும் அதிகம் சாப்பிட வைண்டும்.
ஒமேகா 3, மெக்னீசியம், வைட்டமின் D அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டும்.