அல்சர் A to Z அறிகுறிகள் முதல் தடுப்பு வழிகள்

 

 

இன்றைய வாழ்க்கைச் சூழலில், அல்சர் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஹொட்டல் சாப்பாடு, மாறி வரும் உணவு முறை ஆகியவை தொடர்ந்து அல்சர் நோயை உண்டுபண்ணுகிறது. அரிது அரிது இரைப்பை அல்சர் இல்லாதோர் அரிது என கவிதை எழுதும் அளவிற்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

 

 

 

 

வயதானவர்களுக்குத் தான் அல்சர் வரும் என்று சொல்லி வந்த காலம் மலையேறி விட்டது. இப்போது இளம் வயதிலேயே அல்சர் வந்து விடுகிறது. 40 வயதில் இது ஆவேசம் காட்டுகிறது.

 

அல்சர் என்றால் என்ன:

சீரணக் குழாயில் வயிற்றின் உட்புறம் பகுதியை அரித்து ஒரு வித புண் ஏற்படுகிறது. இந்த புண் வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. பெப்சின் என்சைம் உண்டாகிறது. இந்த இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தற்காப்பு சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதை தான் பெப்டிக் அல்சர் என்கிறார்கள்.

 

காரணங்கள்:

 

அல்சர் ஏற்பட பல காரணங்கள் உண்டு.

  • பாக்டீரியா மூலம் 10 % முதல் 20% அல்சர் ஏற்படுகிறது.
  • வலிக்காக நாம் எடுத்துக் கோள்ளும் வலி மருந்துகள் மூலமாக 10 % முதல் 20% வரை ஏற்படுகிறது.
  • மது பழக்கம், புகைப் பழக்கம் மூலமாக அதிகமாக அல்சர் ஏற்படுகிறது.
  • நிறைய டீ, காபி குடிப்பதன் மூலமாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
  • மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணியாக கருதப் படுகிறது. அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்கிறார்கள்.
  • இரைப்பை அமிலம் அதிகமானாலும் அல்சர் ஏற்படலாம். இரைப்பை சுவர் பலவீனமானாலும் அல்சர் ஏற்படலாம். இந்த இரண்டுக்கும் அடிபாபடை காரணம் இன்றைய வாழ்க்கை முறையே.

 

சாதரமான உணவை நாம் எடுத்துக் கோள்ளும் போது அதை செரிமானம் செய்ய கொஞ்சமாக அமிலம் சுரக்கும். பிரியாணி, சில்லி மாதிரியான உணவுகளை நாம் சாப்பிடும் போது அதை செரிமானம் செய்ய அதிகமான அமிலம் சுரக்கும். அளவுக்கு அதிகமான அமிலம் அடிக்கடி சுரந்தால் அது இரைப்பையைத் தாக்கும். அல்சர் தலை காட்டும்.

மூன்று வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் உணவை எதிர்பார்த்து வயிற்றில் அமிலம் சுரக்கும். அந்த நேரங்களில் நாம் சாப்பிடவில்லை எனில் அந்த அமிலம் இரைப்பை சுவர்களை தின்ன ஆரம்பிக்கும்.
நேரத்தோடு சாப்பிதவர்களுக்கு இந்த வழியில் தான் அல்சர் ஏற்படுகிறது.

சிலருக்கு காரம், புளிப்பு சாப்பிட்டால் அமிலம் அதிகமாகும். சிலருக்கு எண்ணேய் காரணமாகிறது.

அடுத்து மனசுக்கும், அல்சருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனசுக்கும் அமிலச் சுரப்பிகளுக்கும் நடுவில் வேகஸ் எனும் நரம்புப் பாலம் உண்டு. இதன் வழியாகத் தான் மூளையிலிருந்து அமிலம் சுரப்பதைத் தூண்டுகிற ‘ தூதுவர்கள்’ இரைப்பைக்கு வந்து சேருகின்றனர்.

ஆகவே தான், மன அழுத்தம், கவலை, கோபம், பரபரப்பு , ஆத்திரம் போன்ற மனசு சார்ந்த பிரச்சனைகள் நம்மை பாதிக்கும் போதெல்லாம் இரைப்பையில் அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்து அல்சரை வரவேற்கிறது. இது போல உறக்கம் இல்லாத ஓய்வில்லாத வாழ்க்கையும் அல்சருக்கு காரணமாகிறது.

இரைப்பைக்கு மதுவும், புகையும் ஓர் இரட்டைத் துப்பாக்கி போன்றது.ஃஇவை அமிலச் சரப்பை அதிகப் படுத்தும். ஏற்கனவே அல்சர் இருந்தால் அதைத் தீவிரப்படுத்தும். அல்சர் மாத்திரைகளையும் வேலை செய்ய விடாது. இதனால் நோய் குணமாகாது.

இரைப்பைச் சுவர் பலவீனம் ஆனாலும் அல்சர் வரும். இதற்கு காரணம் , ஹெச் பைலோரி, எனும் பாக்ட்டீரியா கிருமி. இது அசுத்தமான தண்ணீரில் வசிக்கிறது. அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களும் அதில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களும் இந்த பாக்டீரியா தொற்றிக் கொள்கிறது.

அல்சர் அறிகுறிகள் என்ன?:

 

அல்சர் இருப்பதற்கான முதல் அறிகுறியே வயிற்றுவலி தான். பசிக்கும் போது சாப்பிட்டதும் நடு ராத்திரியில் வயிற்றில் வலி ஆரம்பிக்கும். வலியோடு நெஞ்செரிச்சல், ஏப்பம், வாந்தி, பசிக்குறைவு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். இரைப்பை அல்சர் இருந்தால்உணவு சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமாகும். சிறுகுடலில் அல்சர் என்றால் சாப்பிட்டதும் வலி குறையும்.

 

 வராமல் தடுப்பது எப்படி:

 

  1. ஒரு வேளை உணவைக் கூடத் தவிர்க்காதீர்கள். தள்ளிப் போட கூடாது.
  2. காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  3. சிறு தானிய உணவுகள், முழு தானிய உணவுகளை உண்ண வேண்டும்.
  4. கத்தரிக்காய் , அவரை உள்ளிட்ட நாட்டுக் காய்கள் சிறந்தது.
  5. அவித்த உணவை அதிகமாகவும் பொரித்த உணவை குறைவாகவும் சாப்பிடுங்கள்.
  6. நீர் மோரும் இனிப்புத் தயிரும் இரைப்பைக்கு நல்லது. தினமும் இதை கடைபிடியுங்கள்.
  7. நொறுக்குத் தீனிக்குப் பதிலாக பழம், சாலட் அதிகமாக சாப்பிடுங்கள்.
  8. காபி, தேனீர், குளிர் பானங்கள், கோலா பாண்டங்கள் சாப்பிடாதீர்கள்.
  9. இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிடுங்கள். குறைவாக சாப்பிடுங்கள்.
  10. அடிக்கடி விருந்துகளுக்குச் சென்று சாப்பிட நேர்ந்தால் குறைவாகச் சாப்பிடுங்கள்.
  11. மதுப் பழக்கம், குடிப் பழக்கம் அறவே விட்டொழியுங்கள்.
  12. உங்களுக்கு வயிறு வலி வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் சுய மருத்துவம் செய்யாதீர்கள். மருத்துவரிடம் உடனடியாகச் செல்லுங்கள்.
  13. தலை வலி, கால் வலி வேறு ஏதேனும் காரணங்களுக்கு வலி மாத்திரைகளை அதிகமாக சாப்பிடாதீர்கள்.

 

சாப்பிட வேண்டிய உணவுகள்:

 நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.

  1. மீன், முட்டை சாப்பிடலாம்.
  2. காலையில் எழுந்ததும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
  3. அத்திக் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றுப் புண் ஆறும்.
  4. ஒரு கைப்பிடி அத்தி இலை , ஒரு கைப் பிடி வேப்பிலை இரண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டு கசாயமாக்கி வடிகட்டி காலையில் குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
  5. துளசி இலைச் சாற்றில் மாசிக்காயை உரைத்து குடித்து வந்தாலும் குணம் கிடைக்கும்.
  6. முட்டைக் கோஸ், சின்ன வேங்காயம், சீரகம் மூன்றையும் சேர்த்து சூப்பாக செய்து குடித்து வந்தாலும் அல்சர் விரைவில் ஆறும்.
  7. தினமும் அத்தி மரப் பட்டை சாறுடன் சம அளவு பசம் பால் சேர்த்து பனங் கற்கண்டுடன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமாகும்.
  8. வாழைப் பழம் சாப்பிடுவது குடல் புண்களை ஆற்றும் ஆப்பிள் பழத்திற்கும் அல்சர் புண்களை ஆற்றும் தன்மை உண்டு.
  9. தண்டுக் கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 

 

எவை சாப்பிட கூடாது:

  • அதிக மசாலா பொருட்கள், குளிர் பானங்கள், நொறுக்குத் தீனிகள் தவிர்ப்பது நல்லது.
  • காரம் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
  • மதுப்பழக்கம் அல்சரை ஆபத்தான நிலைக்கு கொண்டு போய் விடும்.
    மது, புகைப் பழக்கத்தை கை விட வேண்டும்.
  • மாமிச உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • அல்சர் உள்ளவர்களுக்கு பால் ஏற்றதல்ல. அது ஆபத்தை ஏற்படுத்தும்

கவனமாக இருங்கள்:

 

இரைப்பை அமிலத்தைச் சமப்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன்எடுத்துக் கொள்ளுங்கள்.

அமிலம் அதிகமாகச் சுரப்பதைத் தடை செய்யும் மருந்துகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

அல்சர் வந்து புண் உள்ள இடத்தில் இரைப்பை அமிலம் படுவதைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளுங்கள்.

வயிற்று வலி, வாந்திக்கு தரப்படும் மருந்துகளை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரத்திற்கு, சரியான அளவில் சாப்பிடுங்கள்.

சரியான நேரத்தில் ஒய்வெடுங்கள். குறைந்தது 8 யணி நேரம் தூங்குங்கள்.

மதுப் பழக்கம், புகைப் பழக்கம் , புகையிலை போன்றவற்றை விட்டோழியுங்கள்.

 

அல்சரை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விட முடியும். அப்படியே விட்டு விட்டால், அது ஆபத்தான புற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்..

எனவே சரியான உணவுப் பழக்கத்தை மேற்கோண்டு வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பார்த்துக் கோள்வது அவசியமாகும்.

 

இரைப்பைப் புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *