நம்மில் பலருக்கு கீரையின் மகத்துவத்தைப் பற்றி தெரிவதில்லை. இயற்கை நமக்கு பல்வேறு மகத்துவத்தை அளித்திருக்கிறது. அதில் ஒன்று கீரைகள். தினமும் நமது உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வதால் நாம் பல நோய்களிலிருந்து விடுபடலாம். பல கீரை வகைகளைப் பற்றி இங்கு காண்போம்.
பசலைக் கீரை:
சர்க்கரை நோய் கட்டுப் படும். சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். தசைகளை வலுப் படுத்தும்.
மணத்தக்காளி கீரை:
இதன் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும். பழங்கள் கருநீல நிறத்தில் இருக்கும்
இதன் பழங்களை பறித்து சாப்பிடலாம். வாய்ப் புண் சரியாகும். உடல் சூடு சரியாகும். தோல் பளபளப்பாகும். கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கன்னி கீரை:
இரண்டு வகையான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும். கண் பார்வை சீராகும். உடல் சூடு தணியும். எலும்பு பலம் பெறும்.
முருங்கை கீரை:
முருங்கையில் இலை, பூ, காய், கொட்டை என அனைத்துமே சத்து மிக்கவை. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முடி வளர்ச்சியில் முக்கியஜபங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உருவாக்குகிறது. செரிமானக் கோளாறுகளை நீக்குகிறது. ரத்தக் கொதிப்பு சரியாகிறது. ஆண்மைக் குறைவு நீக்குகிறது. முருங்கை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பொரியல், சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.
தண்டுக் கீரை:
இந்தக் கீரை பச்சை, சிவப்பு என இரண்டு நிறங்களில் கிடைக்கும். தண்டு, இலைகள் என இரண்டுமே சத்து மிகுந்தது. சிவப்பு தண்டுக் கீரை தனித்துவமான சத்துக்களைக் கொண்டுள்ளது. உடல் எடையைக் குறைக்கிறது. இரத்தம் உருவாகுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொரியல், மசியல் செய்து சாப்பிடலாம்.
முளைக் கீரை:
இந்தக் கீரையுடன் சீரகம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தண்ணீர் ஊற்றி வதக்கி வெந்ததும் சாப்பாட்டுடன் சாப்பிட்டு வரும் போது எந்த வகையான காய்ச்சலும் சரியாகும். சொறி, சிரங்கு போன்றவை சரியாகும். கொழுப்புகளை கரைக்க கூடியது. இருமல், தோண்டையடைப்பு, தோல் வியாதிகள் சரியாகும். கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம்.
அரைக் கீரை:
ஒரு சிலருக்கு பித்த்தினால் தலை சுற்றல், வாந்தி வரும். இந்த கீரையை பொரியல் அல்லது மசியல் செய்து சாப்பிடும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.
அகத்திக் கீரை:
இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால் இந்தக் கீரையை இரவில் சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகாது. உடல் உஷ்ணம், வயிற்று புண், இதய படபடப்பு நீங்கும் தாய்ப் பால் ஊறும். இதை பொரியல் செய்து சாப்பிடலாம்.
வெந்தயக் கீரை:
இந்தக் கீரை உடம்பக்ககு குளிர்ச்சி தரக் கூடியது. இதை சாம்பார் , பொரியல் செய்து சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரை:
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதங்கள் நீங்கும். மூட்டு வலி கை, கால் வலி போன்றவை குணமாகும். ஜலதோசத்தால் வரும் தலை வலிக்கு முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.
வல்லாரை கீரை:
படிக்கும் குழந்தைகளுக்கு இந்ந கீரையை அடிக்கடி பொரியல் செய்து கொடுத்து வந்தால் கழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும். குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.
தூதுவளை கீரை:
இந்த கீரை சட்னி செய்தும் சாப்பிடலாம். சளி, இருமல் அதிகமாக இருக்கும் போது ரசம் வைத்து குடித்தால் சளி குணமாகும். சரும நோய்களும் குணமாகும்.
சக்கரவர்த்தி கீரை:
கீரைகளுக்கு எல்லாம் அரசன் என்பதால் சக்கரவர்த்தி எனப் பெயர் பெற்றது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. எலும்பை பலமடையச் செய்கிறது. உயிர் அணுக்கள் பெருகும். தாது விருத்தியாகும்.
கருவேப்பிலை கீரை:
கருவேப்பிலை கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.கல்லீரலைப் பாதுகாக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கண் நோய்கள் வராது. செரிமானத்திற்கு நல்லது. தினமும் 4-5 கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடலாம். கருவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்து, நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
கிணற்றுப் பச்சை கீரை:
வெட்டுகாயப் பூண்டு அல்லது கிணற்றுப் பச்சை என்பது சூரிய காந்திக் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது களைச் செடியாக அறியப் படுகிறது. இது பொதுவாக உலகளாவிய வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது. இந்தச் செடியின் இலைகளை வெட்டு காயங்களுக்கு ஊரகப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த இலைகளை நீர் விடாது அரைத்து வெட்டு காயங்களில் பற்று போட்டால், சீல் பிடிக்காமல் விரைவில் ஆறும். இதை குழந்தைகள் தலையை வெட்டி விளையாடுவார்கள்.
முள் முருங்கை கீரை:
ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியது. இந்த இலையை அரைத்து பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த அருமருந்து. மாத விலக்கு காலங்களில் இந்த கீரையைச் சாப்பிட்டால் மாதவிலக்கு வலி நீங்கும்.
அரைக் கீரை:
இந்தக் கீரை காய்ச்சல், கபம் போன்ற நோய்களுக்கு மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன் படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். வாரத்தில் இருமுறை கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம்.
முசுட்டைக் கீரை:
உடல் சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும். மூல நோய் சரியாகும். இந்த கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிடலாம்.
தொய்ய கீரை:
துயிலி கீரை என்றும் அழைப்பார்கள். சோர்ந்து போன உடம்பை சுறுசுறுப்பாக்கும். இரும்பு சத்து அதிகம். தோய்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும் திறன் கோண்டது. உடலுக்கு ஊக்கமூட்டுவது, தெம்பாக்கும். பேறு காலத்திற்கு பிறகு மகளிர் சாப்பிட ஏற்றது. உடல் தேற்றும். துவையல் செய்து சாப்பிடலாம்.
மூக்கிரட்டை கீரை:
உணவே மருந்தாக எடுத்துக் கோண்ட மூலிகைகளில் இதுவும் ஒன்று. வயல் வெளிகளிலும், தோட்டங்களிலும், கிணற்றடிகளும் காணப்படும் இந்தக் கீரையை இந்த தலை முறையினர் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தக் கீரையை எடுத்துக் கோண்டால் பித்தப்பை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
காட்டுக் கீரை:
பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு.
குப்பைமேனிக் கீரை:
நெஞ்சு எரிச்சல் சரியாகும். உடல் சோர்வைப் போக்கும்.
மயிலி கீரை:
உடல் சோர்வைப் போக்கும்.
அப்பக்கோவை கீரை:
கொடி வகையைச் சார்ந்த கீரையாகும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் இந்நக் கீரைக்கு உண்டு. தோல் நோய்கள் குணமாகும். இந்தக் கீரையை சட்னியாகவும் அரைத்து சாப்பிடலாம். பொரியலாகவும் சாப்பிடலாம்.
துத்திக் கீரை:
இந்தக் கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. பொதுவாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம் ஏற்படும். இந்தக் கீரை சாப்பிட்டால் மூல நோய் சரியாகும். குடற்புண் சரியாகும்.
வேலி பருத்தி கீரை:
குடல் புண் சரியாகும். சளி சரியாகும்.
வேந்தயக் கீரை:
ஜீரணக் கோளாறுகளைச் சரி செய்யும். கல்லீரல் சரி செய்யும். பசியைத் தூண்டும். கண் பார்வை சரி செய்யும். வயிற்று நோய்களை சரி செய்யும். சாம்பார் செய்து சாப்பிடலாம்.
காசினி கீரை:
உடல் சூட்டை குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப் போக்கு இவற்றிற்கு காசினி கீரை அருமருந்தாகும். காசினி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வர வெள்ளைப் படுதல் குணமாகும்.
வேளைக் கீரை:
உடல் எடை குறையும்.
அம்மான் பச்சை கீரை:
தாய்ப் பால் அதிகரிக்கும். இந்தக் கீரையின் தண்டை உடைக்கும் போது பால் வரும். அதை மருக்கள் மீது தடவும் போது மருக்கள் மறைந்து விடும்.
புதினா கீரை:
வாய் துர்நாற்றம் போகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
பொடுதலை கீரை :
தோல் நோய்களைப் போக்கும்.
கோவைக் கீரை:
வியர்க்குரு வராமல் தடுக்கும்.
சண்டி கீரை:
சிறுநீர் பெருகும். பெண்களுக்கு ஏற்படும், முதுகு வலி, மூட்டு வலி போக்கும்.
தவசி கீரை:
இருமலை குணமாக்கும்.
நாயுருவி கீரை:
எலும்புகளை வலுவாக்கும். காய்ச்சலைத் தடுக்கும்.
சூரி கீரை:
உடல் சூட்டை தணிக்கும்.
குமுட்டி கீரை:
சர்க்கரை அளவைக் குறைக்கும்.
பருப்புக் கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.
மணலி கீரை:
வாதத்தை போக்கும்.
பிரண்டைக் கீரை:
பசியைத் தூண்டும்.வாய்வு செரிமானப் பிரச்சனை சரியாகும்.
பரட்டைக் கீரை:
இரத்த அழுத்தம் சரியாகும்
கானாவாழை கீரை:
கண் வலி, எரிச்சல் சரியாகும்.
புண்ணாக்கு கீரை:
செரிமான சக்தியை அதிகரிக்கும்.
புளியங் கீரை:
எலும்புகளை பலப்படுத்தும்.
கொத்தமல்லி கீரை:
வயிறு வலி நீங்கும்.
சானக் கீரை:
காயங்களை ஆற்றும்.
பால் பெருக்கி கீரை:
தாய்ப் பால் அதிகரிக்கும்.
புளிச்ச கீரை:
ஆண்மையைப் பெருக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். மாலைக்கண் நோய் குணமாகும்.
காட்டுத் தக்காளி கீரை:
வறட்டு இருமல் போக்கும்.
தும்பைக் கீரை:
சளி, கபம் போன்றவற்றை குணப்படுத்தும்.
கற்பூரவல்லி கீரை:
சளி, இருமல், சுரம் போன்றவை குணமாகும். குடல் பூச்சிகளை அழிக்கும்.
சிறு கீரை:
உடம்பில் உள்ள விச தன்மை நீக்கும்.
முள்ளங்கி கீரை:
சிறுநீரக் கற்கள் சரியாகும். நீர்க் கடுப்பு நீங்கும்.
வெள்ள சாரணை கீரை:
மூட்டு வலி, வாதப் பிரச்சனை நீங்கும்.
துத்தி கீரை:
உடல் புண்களை ஆற்றும். மூலம் சரியாகும்.
நச்சுக் கொட்டை கீரை:
வயிறு புண், சிறுநீரகப் பிரச்சனை நீங்கும்.
வாத நாராயணன் கீரை:
மூட்டு வலி, கை, கால் வலி குணமாகும்.
கொடி பசல கீரை:
தாய்ப் பால் அதிகரிக்கும். வாய்ப் புண் சரியாகும்.
கல்யாண முருங்கை கீரை:
கருப்பை கோளாறுகள் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.
தண்டு கீரை:
ரத்த சோகை குணமாகும். எலும்பு வலுப் பெறும்.
முளைக் கீரை:
மாலைக்கண் நோய் குணமாகும்.
குறிஞ்சான் கீரை:
சர்க்கரை நோய் குணமாகும்.