ஒவ்வொருவரும் பளபளப்பான, பளபளப்பான சருமத்தை விரும்புகிறார்கள், ஆனால் அந்த ஆரோக்கியமான, ஒளிரும் பளபளப்பை அடைய நல்ல தோல் பராமரிப்பு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் சரியான சுய பராமரிப்பு ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது. நீங்கள் இயற்கையான பளபளப்பை அடைய விரும்பினாலும் சரி அல்லது உங்கள் நிறத்தை மேம்படுத்த விரும்பினாலும் சரி, பளபளப்பான முகம் மற்றும் சருமத்திற்கான சில நடைமுறை குறிப்புகள் இங்கே.
நாம் அனைவரும் உடல் நலத்தை பேணி பாதுகாக்கிறோம். உடல் நலத்திற்கான அக்கறையும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் நம் அழகையும் பேணிப் பாதுகாக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கான வழி முறைகளும் ஆலோசனைகளும் நமக்கு எளிதில் கிடைப்பதில்லை. பொதுவாக பெண்களுக்கு அவர்களின் அழகைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். நாம் தினமும் சில வழி முறைகளை நமது முகத்தில் பராமரித்தாலே முகம் பளபளப்பாக மாறும் சில இயற்கையான எளிய வழி முறைகளை காணலாம்.
கசகசவை அரைத்து பசும் பால் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி கழுவும் போது முகம் மற்றும் கழுத்து பளபளப்பாக இருக்க உதவும். கேரட் மசித்து தேன் கலந்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இதே போல் நல்ல பலனைக் கொடுக்கும் பதிவுகளை பார்க்கலாம்:
தயிர் வெண்ணைப் பழம்:
தயிர். 1/2 கப்.
வெண்ணெய் பழம் (அவகேடோ)- பாதி
கற்றாழை ஜெல். 2 டீஸ்பூன்
செய்முறை:
இந்தப் போருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும். பின் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி வைக்கவும். 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலனை பெறலாம்.
ஓட்ஸ்- தயிர்
தயிர்- 1 தேக்கரண்டி
ஒட்ஸ்-1 டீஸ்பூன்
தேன்- 1/2 டீஸ்பூன்
இந்தப் போருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும். பின் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி வைக்கவும். 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலனை பெறலாம்.
தேன்-தயிர்
தயிர் – 1/2 கப்
தேன்- டீஸ்பூன்
இவை இரண்டையும் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் படும்படி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
கஸ்தூரி மஞ்சள் தயிர் இவை இரண்டையும் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யும் போது மாற்றத்தை காண்பீர்கள்.
ஆரஞ்சு பழத் தோல்:
நாம் வீட்டில்அன்றாடம் பயன் படுத்தும் ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு முகத்தில் பூசி வர நம் முகம் பளபளப்பாக மாறும்.
அரிசி கழுவிய தண்ணீர்:
அரிசி கழுவிய நீரில் முகத்தை தினமும் கழுவுவதன் மூலம் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் அழகாக மாறும்.
ஆவாரம் பூ:
ஆவாரம் பூவை நிலலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை பச்சைப் பயறு மாவுடன் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
உள்ளேயும் வெளியேயும் நீரேற்றமாக இருப்பது:
ஒளிரும் சருமத்திற்கான முக்கியமான படிகளில் ஒன்று நீரேற்றமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடனும், சுறு சுறுப்புடனும் இருக்க உதவுகிறது. தினமும் 8 டம்ளர் அல்லது அதற்கு மேல் தண்ணீர் கட்டாயமாக குடிக்க வேண்டும். இதனால் முகமும் உடலும் பொலிவு பெறும். இயற்கையான மாய்ஸ்சரைசர்கள் போடுவதால் சருமம் ஈரப்பதமாக இருக்கும்.
தோல் பராமரிப்பு வழக்கம் பின் பற்ற வேண்டும்:
ஒளிரும் சருமத்தை பராமரிக்க தோல் பராமரிப்பு வழக்கம் தேவை. அழுக்கு எண்ணெய் மற்றும் மேக்கப்பை அகற்ற உங்கள் முகத்தை தினமும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் நிறத்தை பராமரிக்க வைட்டமின் சி போன்ற பழங்களை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
போதுமான தூக்கம் தேவை:
நீங்கள் தூங்கும் போது உங்கள் சருமம் மீண்டும் உருவாகிறது. எனவே போதுமான ஓய்வு (7-9) மணி நேரம் தூக்கம் தேவை. தூக்கத்தின் போது உங்கள் சேதமான செல்களை மீட்டெடுக்கிறது. தூக்கமின்மை மந்தமான தன்மை மற்றும் கருவளையங்கள் வர வழி வகுக்கும். இதனால் உங்கள் முகம் சோர்வாகவும் உயிரற்றதாகவும் இருக்கும்.
சருமத்திற்கு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்:
நீங்கள் சாப்பிடுவது உங்கள் சருமத்தின் தோற்றத்தை பாதிக்கிறது. உங்களின் சருமத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. பழங்கள் காய்கறிகள் முழு தானாயங்கள் சிட்ரஸ் பழங்கள் ( வைட்டமின் சி) ஒமேகா 3 , மீன், கொட்டைகள் மற்றும் விதைகளில் கிடைக்கிறது.
மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கனிகளிலும், கொட்டைகளிலும், இலை தழைகளிலும் , காய்களிலும் தான் உள்ளது. இவற்றை சமைத்தாலும் கூட சத்துக்கள் போய் விடும். அதனால் முடிந்த அளவு காய்களை பச்சையாக சாப்பிட பழக வேண்டும்.
முக மூடிகளைப் பயன்படுத்த வேண்டும் :
உங்களின் தோல் வகையின் அடிப்படையில் வாரத்திற்கு 1 முதல் 2 முறை முகமூடிகளை பயன் படுத்த வேண்டும். தேன் அல்லது கற்றாழை போன்ற பொருட்களால் ஆன முகமூடி ஈரப்பதம் அளிக்கும்.
தோடர்ந்து உடற் பயிற்சி செய்யுங்கள்:
உடல் செயல்பாடு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே கண்டிப்பாக உடற் பயிற்சி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போதேல்லாம் சின்ன சின்ன உடற் பயிற்சிகளை செய்ய வேண்டும். காலை நேரத்தில் செய்வதுஸமிகவும் சிறந்தது.
மன அழுத்தத்தை தவிருங்கள்:
நாள் பட்ட மன அழுத்தம் முகப் பரு, அரிக்கும். தோல் அழற்சி மற்றும் வயதான தோற்றத்தை அளிக்கும். சந்தோசமாக வாழ பழங்குங்கள்.
தினமும் சன் ஸ்கீரினை பயன் படுத்துங்கள்:
சூரிய ஒளி படுவதால் முகம் பொலிவிழந்து விடும். இயற்கை தயாரிப்பு சன் ஸ்கீரினை பயன் படுத்தும் போது நல்ல பலனை அடையலாம்.
உங்கள் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்:
இயற்கையான கிரீம்களை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முகம் பள பளப்பாக இருக்கும்.
உங்கள் முகத்தை தொடுவதை தவிர்க்கவும்:
அடிக்கடி முகத்தை தொடும் பழக்கத்தை மாற்றுங்கள். அடிக்கடி தொடுவதால் நம் கைகளில் உள்ள முகத்தில் படும்.
கடுமையான தயாரிப்புகளை தவிர்க்கவும்:
கடுமையான இராசயனங்கள் ஆல்கஹால் அல்லது வாசனை திரவியம் கோண்ட தயாரிப்புகளைப் பயன் படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, மந்தமாகவும், வறண்டதாகவும் ஆக்கி விடும். மென்மையான ஈரப் பதமூட்டும் தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர் வினையூட்டும் மற்றும் சிவத்தல் வெடிப்புகள் உண்டாகும் தயாரிப்புகளை தவிர்க்கவும்.
முகத்தையும் உடம்பையும் பாதுகாப்பாகவும் பள பளப்பாகவும் வைப்பதில் பழங்களின் பங்கு
திராட்சை:
திராட்சை புளிப்பு சுவை உடையது. ஆனால் திராட்சையில் பல பலன்கள் உள்ளன. உடலுக்கு நல்ல சக்தி தரக் கூடியவை. இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை உண்டு. இதனால் உடலும் மனமும் உற்சாகம் அடையும். திராட்சை சாப்பிடும் போது உடலில் உள்ள சளி, கபம், வாயு மற்றும் கழிவுகள் கரைந்து வெளியேறும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். திராட்சையின் புளிப்பு நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்குள் சென்று சக்தியைக் கொடுக்கும்.
சாத்துக் குடி:
உணவே மருந்து மருந்தே உணவு என்ற அடிப்படையில் இதனை எடுத்துக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான காப்பியை குடிப்பதை விட இது நூறு மடங்கு சிறந்தது. சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதன் மூலம் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது.
ஆரஞ்சு:
ஆரஞ்சசு பழங்களில் வைட்டமின் சி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. செரிமான சக்தியை உண்டாக்கும். இரத்தம் சுத்தமாகும். உடனெ தெம்பு தரக் கூடியது. நமது அன்றாட வேலைகளை புத்துணர்ச்சியுடன் செய்யலாம்.
மாதுளை:
மாதுளையில் நிறைய மருத்துவ குணங்கள் இயற்கையாகவே அடங்கி உள்ளது. இரத்தம் புதிதாக ஊறும். இதனால் முகமும் உடம்பும் பள பளப்பாக மாறும்.
பப்பாளி:
பப்பாளி அழகு பெற வழி. பப்பாளியை தினமும் சிறிதளவு சாப்பிடுவதால் உங்கள் சருமம் பொலிவு பெறும். மேலும் செரிமானக் குறைபாடுகள். மூலம், மலச் சிக்கல், கர்ப்பப்பை கோளாறுகள் ஆகியவற்றிற்கு சிறந்தது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ இதில் உள்ளது.
சப்போட்டா:
சப்போட்டா சாப்பிடும் போது அல்சர் குணமாகும். இதில் மாவுப் பொருளும் சர்க்கரையும் உள்ளது. எனவே இதை பசி அதிகமாக உள்ள போது சாப்பிட வேண்டும்.
ஆப்பிள்:
ஆப்பிள் தினமும் சாப்பிடும் போது டாக்டர் தேவை இல்லை. எல்லா வகையான நோயாளிகளும் சாப்பிடலாம்.
பழங்களை உண்டு நோய்களை போக்குவோம். நீண்ட ஆயுளைப் பெறுவோம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மூலம் நாம் நமது முகத்தையும் உடம்பையும் பாதுகாக்கலாம். முதுமை தோற்றத்தை தள்ளி போடலாம். அதற்கு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் தேவை. சாப்பிடும் போது பழங்கள், காய் கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் 30 நிமிடமாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். மேலும் விளம்பரங்களைப் பார்த்து இரசாயனம் கலந்த தயாரிப்புகளை பயன் படுத்த கூடாது.