உயர் இரத்த அழுத்தம்(BP) காரணங்களும் தீர்வுகளும்

 

நாம் நம் வீடுகளில் விவாதம் பண்ணும் போதோ, அலுவலகங்களில் விவாதம் பண்ணும் போதோ, ரோடுகளில் யார் என்றே தெரியாத ஒருவருடன் விவாதம் பண்ணும் போதோ, நமக்கு உடனே முதல் வார்த்தையாக வருவது உன்னால் தான் எனக்கு பிபி வரப் போகிறது என்று யோசிக்காமல் சட்டென்று கூறுவோம்.

இப்போது அப்படிப்பட்ட ஹைப்பர் டென்ஷன் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். ஹைப்பர் டென்ஷனும், பிபி யும் ஒன்று என்பதை பார்க்கப் போகிறோம்.

உலக மக்கள் தொகையில் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத மக்களுக்கு பிபி இருக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகிறது. இதில் பிபி யால் பாதிக்கப்பட்ட ஐம்பது சதவீத மக்களில் குறைந்நது இருபதிலிருந்து இருபத்தைந்து சதவீத மக்கள் மட்டுமே பிபி-யை சிகிச்சை மூலம் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். மற்ற இருபத்தைந்து சதவீத மக்களுக்கு பிபி இருப்பது தெரிந்தும், அதை கண்ட்ரோலில் வைக்காமல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறது ஆய்வுகள்.

 

BP blood pressure. 1628 ஆம் வருடத்தில் வில்லியம் ஹார்வே இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தார்.

நம் இரத்தக் குழாயில் இரத்தம் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதே (BP ) இரத்த அழுத்தம் ஆகும்.

அதிகமான மக்கள் சொல்வதேல்லாம் BP இருக்கு ஆனா எந்த மருந்து மாத்திரையும் எடுப்பதில்லை என்று கூறுவார்கள். இப்படி BP அதிகமாக விடும் போது பக்க விளைவுகளைப் பற்றி நாம் அறிவதில்லை. இதில் முக்கியமாக பிபி அதிகமாக இருந்து நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், அதனால் ஹார்ட் பெயிலியர் வர வாய்ப்புகள் அதிகம்.

 

ஹார்ட் பெயிலியர் என்றால் என்ன?. யாருக்கெல்லாம் வரும்:

இதில் இரண்டு வகை இருக்கிறார்கள். ஒன்று பிபி இருக்கு மாத்திரை எடுப்பவர்கள். இரண்டாவது வகை பிபி இருக்கு ஆனா மாத்திரை எடுக்காமல் கண்ரோலில் வைத்திருப்பார்கள்.

இரத்த அழுத்தம் கண்ரோலில் இருந்தாலும் 130/90 க்கு குறைவாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிபி இருக்கு வயது 40. இரண்டு வருடத்திற்கு மேலாக இருக்கிறது. 200 க்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் ஆபத்துக்கள் அதிகம். முக்கியமாக பெருமூச்சிரைப்பு, நெஞ்சு வலி இருக்கு என்பவர்களுக்கு conjestive heart failure முதல் கட்ட அறிகுறிகள் இருக்கும்.

தொடர்ச்சியாக நமது இதயம் அதிக இரத்த அழுத்தத்திலேயே ஓடிக் கொண்டு இருந்தால் நமது இதய வால்வுகள் பாதிக்கும். ஏனெனில் அழுத்தம் அதிகமாக இருக்கும். பிரஷர் இல்லாமல் ஓடினால் எவ்வளவு வருடம் ஆனாலும் பிரச்சனை இல்லை.

எவ்வளவு நாள் அதிக அழுத்தத்தை தக்க வைக்கிறோமோ அந்த அளவு பாதிப்பு இருக்கும். தொடர்ச்சியாக அதிக அழுத்தத்திலேயே இயக்கிக் கொண்டு இருந்தால் இதய குழாய் அடைப்பு, இதய வாழ்வு செயலிழப்பு, இதய அறைகள் வீங்கிப் போதல் போன்ற பிரச்சனைகள் வரும்.

இந்த வீக்கம் வந்து விட்டால் இதயத்திற்கு இரத்தம் செல்வது பாதிக்கப் படும்.

இதயத்தின் உள் வால்வுகள், செல்கள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். பிபி க்கு விழிப்புணர்வு தேவை. பிபி இருந்தால் மருந்து எடுக்கா விட்டாலும் கண்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிபி-யை கண்ரோலில் வைக்க செய்ய வேண்டியவை:

  • தினமும் 30 நிமிடமாவது நடைப் பயிற்சி வேண்டும்.
  • கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிட கூடாது.
  • புகைப் பிடித்தல் அறவே கூடாது.
  • ஆல்கஹால் எடுக்கக் கூடாது.
  • மன அழுத்தம் அதிகமாக இருக்கக் கூடாது.
  • யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் முறைகளைத் தெரிந்து செய்து பாருங்கள். 
  • பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் போன்ற சமவலு உணவுகளை எடுத்துக் கொள்ளவும். 
  • அதிக உப்பு காரம் இவற்றைக் குறைக்க வேண்டும். இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட வேண்டும்.
  • உயர் ரத்த அழுத்தம் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். 

 

பிபி தொடர்ந்தால் என்ன ஆகும்:

  • இதயம் பாதிக்கும்.
  • கொழுப்பு அதிகமாகும்.
  • நமது தலைமுறையையும் பாதிக்கும்.
  • ஹார்ட் பெயிலியர் வர வாய்ப்புகள் அதிகம்.
  • இதய குழாய் அடைப்பு, இதய வாழ்வு செயலிழப்பு, இதய அறைகள் வீங்கிப் போதல் போன்ற பிரச்சனைகள் வரும்.

 

உயர் இரத்த அழுத்தம் உணவுகள்:

 

முருங்கைக் கீரை(காய்), வேண் பூசணி, வெள்ளரிக் காய், நெல்லிக் காய், எலுமிச்சம் பழம், மாதுளம் பழம், சீரகத் தண்ணீர், வெந்தயத் தண்ணீர், மீன்

 

 

பிபி-யைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்:

 

உடலிலுள்ள அனைத்து செல்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆக்சிஜனும், நியூட்ரிஷியனும் தேவைப்படுகிறது. உடலிலுள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதற்கான சத்தாக ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு பிரஷர் தேவைப்படுகிறது. அந்த பிரஷரை ஹார்ட் பம்ப் மூலம் அனைத்து பாகங்களுக்கும் செல்லும் படி ஹார்ட் பார்த்துக் கொள்கிறது.

ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி ஆக்சிஜனும், நியூட்ரிஷியனும் சரியாக உடலின் செல்களுக்கு செல்ல முடியாது.

அதனால் தான், ரத்த ஓட்டத்தின் பிரஷர் சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது systolic BP என்பது 100 லிருந்து 140 க்குள் இருக்க வேண்டும். Diastolic BP என்பது 60 இல் இருந்து 90- க்குள் இருக்க வேண்டும்.

 

நோய்க்கான காரணங்கள்:

எந்தவொரு நோயாக இருந்தாலும், முதலில் மரபணு சார்ந்த விசயங்களில் இருந்து தான் ஆரம்பிக்கும். பிரஷரும் அப்படியே. குடும்பத்தில் பிரஷரால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது, மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால், இது மட்டுமே காரணமில்லை. ஒரு சிலர் அதிகளவு உணவில் உப்பு எடுத்துக் கொண்டாலோ அல்லது அதிகளவு உப்பு சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டாலோ பிரஷர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், உடலுக்கு உடற்பயிற்சி செய்யாமலோ அல்லது உடல் அதிக எடையுடன் ஒபிசிட்டி சார்ந்த பிரச்சனைகளுடன் இருந்தாலோ, அவர்களுக்கும் பிரஷர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

 

பிபி இருப்பதை கண்டறியும் வழிமுறைகள்:

 

  • முதலில் ஒருவருக்கு பிபி ஆரம்பமாகிறது என்றால், தலைவலி தொடர்ச்சியாக இருப்பது.
  • மயக்கம் வருவது
  • வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
  • சிலருக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லாமலும் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
  • சிலர் கேட்பார்கள், பிபி இருந்தால் என்ன?
    அது பாட்டுக்கு வந்துட்டு போகப் போகுது என்பார்கள். அப்படியெல்லாம் பிபி-யை நாம் எளிதாக எடுக்க முடியாது.

ஒருவருக்கு பிபி இருப்பது தெரியாமல் இருக்கும் போதோ அல்லது பிபி-க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் போதோ, ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும் போது, முக்கியமான மூன்று பாதிப்புகள் உடலில் ஏற்படும்.

  1. தலையில் ஸ்ட்ரோக் வரலாம். அதனால் கை, கால் இயங்க முடியாமல் போகலாம்.
  2. இருதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம்.
  3. கிட்னியில் சிறு நீரக செயலிழப்பு சார்ந்த நோய்கள் ஏற்படாலாம்.
  4. இவற்றை தவிர, மேலும் ரத்த நாளங்களில்பிரச்சனைகள் ஏற்படும்.

சிலர் இந்த அரறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், ஸ்ட்ரோக் வந்த பின்னாடி தான், பல வருசமாக பிபி சார்ந்து எந்த வித சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார் என்றும் மருத்துவர்களிடம் கூறுவார்கள்.

ஆனால், பிபி-க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் போது, அவரது வாழ்நாள் இயக்கம் சிலருக்கு மிகவும் பாதிப்படைந்து விடும். அதனால் தான், பிபி இருக்கிறது என்றால், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையோடு எடுக்க வேண்டும்.

 

வராமல் இருப்பதற்கு என்ன பண்ணலாம்:

 

முதலில் உணவு சார்ந்த விஷயங்களில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 12 கிராம் அளவுள்ள உப்பை உணவுடன் எடுத்துக் கொள்கிறான் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் , முதலில் உப்பை கட்டுப்பாட்டுடன் சாப்பிட வேண்டும்.

அதாவது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 6 கிராமுக்கும் குறைவாக அதாவது 5 கிராம் அளவுள்ள உப்பை மட்டும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு டீஸ்பூன் அளவுள்ள உப்பை மட்டும் ஒருவர் சாப்பிட வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த நாள் முழுமைக்கும் மொத்தமாக ஐந்து டீ ஸ்பூன் அளவில் தான் சமையலில் செலவிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

இந்த அளவின் படி, உப்பு எடுக்கும் போதூ, மாத்திரை சாப்பிடும் முன்னரே, 10 மில்லி அளவு பிரஷர் குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அந்தளவிற்கு பிபி வருவதற்கு உப்பின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

அதன் பின், உடலின் எடை 160 செ.மீ உயரத்துடன் இருப்பவர்கள் 60 கிலோ இருக்கலாம். 170 செ. மீ உயரத்துடன் இருப்பவர்கள் 70 கிலோ இருக்கலாம். உயரத்திற்கு அதிகமான எடையுடன் இருப்பவர்கள், உதாரணத்திற்கு, 170 செ.மீ உயரத்தில் இருப்பவர்கள் 80 கிலோ இருந்தால், அவர்கள் குறைந்தது 10 கிலோ எடை குறைத்தாலே, 10 மில்லி அளவு பிரஷரும் குறைந்து விடும். அந்தளவிற்கு உடலின் எடையும் ரத்த ஒட்டத்தின் தடைக்கு பங்களிக்கிறது.

அதனால், முடிந்தளவு உப்பையும், உடலின் எடையும் குறையும் போது, 20 மில்லி அளவு பிபி குறையும். மேலும், உடற்பயிற்சி ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரம் செய்ய வேண்டும். இதனால் பிபி-க்கு மருந்து எடுப்பவர்களது பிபி யின் அளவு ஓரளவு நிதானமாக இருக்கும். மேலும், மற்ற நபர்களுக்கு பிபி வராமல் தடுக்கவும் முடியும்.

இதோடு, புகை பிடிப்பவர்கள் கண்டிப்பாக புகை பிடிக்கக் கூடாது. மேலும் இன்றைக்கு ஆல்கஹால் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், நிதானமாக ஆல்கஹாலை எடுக்கப் பழக வேண்டும். இவற்றை எல்லாம் கடை பிடிக்கும் போது, உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இவற்றை எல்லாம் சரி செய்து, சரியாக தூங்கவில்லை என்றால் பிரஷரை சரி செய்ய முடியாது. அதாவது, ஸ்லீப் ஸ்டடியில், ஸ்லீப் அனிமீயா என்பார்கள். அதாவது தூங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு சில நொடிகள் மட்டும் மூச்சு நின்று விட்டு, மறுபடியும் மூச்சு இயல்பாக இயங்க ஆரம்பிக்கும். இம்மாதிரியான பாதிப்பு ஏற்படும் போது பிரஷர் இருக்கும்.

 

ஸ்லீப் அப்னியா என்பது வேறு, குறட்டை என்பது வேறு. அதனால், குறட்டை விடுபவர்கள் இதோடு ஒப்பிட வேண்டாம். அதனால், தூக்கத்தையும் கணக்கில் கொண்டு, நாம் குறிப்பிட்ட நேரத்தை தூக்கத்திற்கு செலவிட வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சில வாழ்வியல் நடை முறைகளை மாற்றிக் கொண்டாலே, பிரஷரை சரியாக்க முடியும். மேலும், பிரஷருக்கு மாத்திரை எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ வாழ்வியல் நடைமுறை மாற்றங்களோடு செய்யலாம். பெரும்பாலும் பிபி க்கு மருந்து எடுத்து ஏற்படும் பக்க விளைவுகளை விட, பிபி க்கு மாத்திரை எடுக்காமல் ஏற்படும் பக்க விளைவுகள் தான் அதிகம். அதனால், பிபி யை முறையாக வைக்க முயற்சிக்க வேண்டும். அதனை மீறி, பிபி இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *