கோடை கால நோய்களும், தீர்வுகளும்

கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயில் சுட்டெரிக்கும். இந்த கடுமையான வெப்பநிலை காரணமாக, வெப்ப பக்கவாதம், வெப்ப சோர்வு, நீரிழப்பு , சின்னம்மை, காய்ச்சல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்களது உடலையும் வாழ்க்கை முறையையும் சட்டெரிக்கும் வெயிலைத் தாங்குவதற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

வெப்ப சோர்வு:

  • இது அதிகப்படியான வயர்வை காரணமாக உடலிலிருந்து அதிகமாக நீர் மற்றும் உப்பு வெளியேறும் போது உண்டாகிறது இந்நிலையில் அதிக வியர்வை, தலைவலி, பலவீனம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் தசைப் பிடிப்பு ஆகியவை ஏற்படும்.
  • வெப்ப சோர்வு அறிகுறிகள் இருக்கும் போது உடனடியாக செய்ய வேண்டியவை:
  • வெப்ப சோர்வு அறிகுறிகளை காட்டினால் வெப்ப சோர்வுக்கு முன்னேறுவதை தடுக்க விரைவாக செயல்பட வேண்டும்.
  • வெப்ப சோர்வு அறிகுறி இருந்தால் முதலில் குளிரூட்டப் பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நிழலில் அல்லது குளிர்ந்த இடத்தில் அவர்கள் இருக்க வேண்டும்.
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்த கால்களை சற்று உயர்த்தி வைக்க செய்யலாம்.
  • உடலை குளிர்வாக வைத்திருக்க ஆடைகளை தளர்த்த வேண்டும்
  • உடல் குளிர் வெப்பநிலை குறைய குளிர் அமுக்கங்கள், ஈரமான துண்டுகள் அல்லது விசிறி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • உடல் வெப்பநிலை குறைய தண்ணீர் அல்லது எலக்ட்ரோலைட் பானங்கள் கொடுக்க வேண்டும். காஃபின் அல்லது ஆல்கஹால் தவிர்க்கவும்.
  • வெப்ப சோர்வு அறிகுறிகள் 30 நிமிடங்களுக்குள் மேம்படவில்லை என்றால் மோசமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வெப்ப பக்கவாதம்:

 

உடலின் வெப்ப நிலை அதிகரித்து உடல் அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தோல்வி அடையும் போது ஏற்படும் மருத்துவ அவசர நிலையாகும்.

இந்நிலையில் குழப்பம், சுய நினைவு இழப்பு, வறண்ட அல்லது சூடான தோல் இருக்கும். சிகிச்சையளிக்கா விட்டால் இவர்களுக்கு உறுப்பு சேதம் அல்லது மரணம் கூட ஏற்படும். மேலும் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் இந்த வெப்ப சோர்வு வெப்ப பக்கவாதமாக முன்னேறும். அதனால் ஆரம்ப கால தலையீடு முக்கியமானது.

 

வெப்பம் தொடர்பான யார் அதிகம் பாதிக்கப்படுவர்:

 

வெப்பம் தொடர்பான நோய்கள் எல்லோருக்கும் வரலாம் என்றாலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு இதற்கான ஆபத்துகள் அதிகரிக்கலாம்.

வயதானவர்களுக்கு உடலின் குளிர்விக்கும் திறன் குறைவதால் இவர்கள் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது.

கைக்குழந்தைகள் மற்றும் வளரும் குழந்தைகள் உடல் வேகமாக வெப்பம் அடைகிறது. இவர்கள் நீரேற்றமாகவும் களிர்ச்சியாகவும் வைத்திருப்பது பெற்றோர்களின் கவனிப்பில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

இதயநோய் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த வெப்ப கட்டுப்பாடு சிரமத்தை உண்டு செய்யலாம்.

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது வெயிலில் உழைப்பவர்கள் நீரிழப்பு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களை பெறுபவர்களில் முக்கியமானவர்கள்.

பெண்களின் உடல் வெப்பநிலை ஏற்கனவே உயர்ந்திருக்கும். இதனால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி இருக்கும் போது அவர்கள் வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகும் அபாயம் உண்டு.

டையூரிடிக்ஸ் ஆன்டி ஹிஸ்டமின்கள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், உடலின் வியர்வை திறனை பாதிக்கின்றன.
மேலும் உடல் வெப்ப நிலையை கட்டுபடுத்துகின்றன.

 

கோடையில் வெப்பமான காலத்தில் நீரேற்றமாக இருக்க செய்ய வேண்டியவை:

 

  1. நீரேற்றமாக இருப்பது என்பது தண்ணீர் குடிப்பது மட்டும் அல்ல.இது உடலில் திரவங்கள். மற்றும் எலக்ரோ லைட்டுகளின் சரியான சமநிலையை தக்க வைப்பதையும் குறிக்கும்.
  2. நாள் ஒன்றுக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக வியர்த்தால் அதற்கு மேல் தண்ணீர் குடிப்பது நல்லது.
  3. தாகம் என்பது நீரிழப்பின் தாமத அறிகுறியாகும். அதனால் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  4. அதிகமாக வியர்த்தால் இழந்த தாதுக்களை சரி செய்ய எலகட்ரோலைட் பானங்கள், இளநீர், வாழைப்பழங்கள் போன்ற இயற்கை பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  5. தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ர்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் நீரேற்றம் பராமரிக்க உதவுகின்றன.
  6. சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் சரியான நீரேற்றத்தை குறிக்கிறது. மேலும் அடர் மஞ்சள் நிற சிறுநீர் அதிக திரவங்கள் தேவை என்பதை குறிக்கிறது.

கோடையில் உடல் சூட்டைப் போக்க:

  • தளர்ந்த ஆடைகளை அணியவும்.
  • வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
  • குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
  • தண்ணீர், தேங்காய் தண்ணீர், பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கவும்.
  • பனங்கருப்பால், தயிர், இளநீரை குடிக்கவும்.
  • சரியான தூக்கத்தை எடுக்கவும்.
  • சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவும்.

 கிருமிகள் பரவாமல் தடுக்க:

  1. கைகளை அடிக்கடி கழுவவும்,
  2. சுத்தமான குடிநீர் பயன்படுத்தவும்,
  3. சுத்தமான உணவு பயன்படுத்தவும்,
  4. பொது இடங்களில் கிருமிகள் பரவாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவும், கிருமிகள் பரவக்கூடிய இடங்களில் கிருமிகள் கொல்லும் திரவங்களை பயன்படுத்தவும்.

   தடுப்பூசி போட:

  • தட்டம்மை, சளி, ரூபெல்லா போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடவும்.
  • டைபாய்டு மற்றும் காலரா தடுப்பூசி போடவும்.

மருத்துவரை அணுகவும்:

  • உடல் சூடு அதிகமாக இருந்தால்,
  • வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால்,
  • தோல் அலர்ஜி, தடிப்புகள், அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால்,

 

இந்த காலத்தில் வியர்வை காரணமாக தோல் நோய்கள், தொற்றுகள் அதிக வெப்பம் காரணமாக தோல்களில் தடிப்புகள் போன்றவை பலருக்கு ஏற்படுகிறது. வியர்வையால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க 2 முறை குளித்து, தளர்வான ஆடைகளை அணிவது என்பது முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும்.

காற்று உள்ளே செல்லாத இடுப்புப் பகுதி, அக்குள் போன்ற துணககளால் மூடப்பட்ட பகுதிகளில் வியர்வை எப்போதும் இருக்கும்.

இதன் காரணமாக இரண்டாம் நிலை பாக்ட்டீரியா தொற்று மற்றும் மேலோட்டமான பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதில் படர்தாமரை எனப்படும் பூஞ்சை தொற்றும் ஒன்றாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக் கூடியது. இந்த தொற்று பரவாமல் இருக்க அவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர் பயன்படுத்தக் கூடாது.

இதே போன்று மற்ற தொற்றுநோய் பாதிப்பிலும் பின்பற்றப் பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் விரைவான சிகிச்சைக்காக ஸ்டீராய்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தொற்று அதிகரிக்கும், நோய் முற்றிய நிலையில் நோயாளிகள் அதற்கு முறையான மருந்துகளை எடுக்கும் போது மட்டுமே அது முழுமையாக குணம் அடையும்.

இந்த நோய் பாதித்த ஒருவர், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க, முறையான சிகிச்சையைப் பெற உடனடியாக ஒரு தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

சிலருக்கு அதிக சூரிய ஒளி காரணமாக முகம், முதுகு, கைகள் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு முறையான சிகிச்சை பெறா விடாடால் இந்த தடிப்புகள் உடல் முழுவதும் பரவி விடும்.

இந்த பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளி உடலில் படாமல் இருக்க குடை, அகலமான பெரிய தொப்பி, உடலை முழுமையாக மூடும் ஆடைகள் மற்றும் சன்கிளாஸ்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மேலும் உங்கள் தோலின் தன்மை, உங்களது வாழ்க்கை முறை மற்றும் பிற நிலைமைகளைப் பொறுத்து சரியான சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.

நீங்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் உங்களுக்கு பொருத்தமற்றதாகவோ அல்லது ஹார்மோன் சீர்குலைவை ஏற்ப்படுத்தும். தோலை ஆரோக்கியமாக பராமரிக்க ஒரு முறை தோல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

அதே போல் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தோல் என்பது உள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும். தோல் சம்பந்தமான நோய்கள் வராயல் தவிர்க்க நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் அதற்கு முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

தலையில் உள்ள முடியில் அழுக்கு சேராதவாறு நன்கு தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். முடியை சரியாக பராமரிக்கா விட்டால் தலையில் வீக்கம், பொடுகு மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.

குளிப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன் தலைக்கு எண்ணெய் தடவுங்கள். உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். எண்ணெய் பசையுடன் நீங்கள் வெளியே செல்வது என்பது அதிக ஆழுக்கு சேருவதற்கு வழிவகுக்கும்.

சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி நிம்மதியான தூக்கம் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

சமூக ஊடகங்களில் சொல்லப்படுவதை பின்பற்றாமல் , அவை எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை சரிபார்த்து, எந்தவொரு தோல், முடி மற்றும் நகப் பிரச்சனைகளுக்கும் , தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

சமூக ஊடகங்களில் போலியான விளம்பரத்தால். உங்கள் உடலை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *