முகம் பொலிவாக உடல் பளபளக்க கற்றாழை

 

இயற்கை நம் நல் வாழ்வுக்காக பல்வேறு மூலிகைகளை வாரி வழங்கியுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று கற்றாழை ஆகும். அதன் நற்பயன்களை நாம் மிகவும் தாமதமாகத் தான் புரிந்து கொண்டுள்ளோம். அந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதன் அடையாளமாகத் தான் பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் கற்றாழை ஓர் உட்பொருளாகச் சேர்க்கப்படுவதாக சொல்லப் படுகிறது. பெரிய நகரங்களில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பூங்காக்கள், கடற்கரைகளில் கற்றாழை ஜீஸாக கொடுக்கிறார்கள்.

கற்றாழையை ‘குமரி’ என்றும் அழைக்கிறார்கள். பெண்களின் தோழி என்றும் கூறலாம். ஏனெனில் பேண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை கோளாறுகள் , மாதவிடாய் பிரச்சனைகள், வேள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன் படுகிறது.

கற்றாழை சாறை தினமும் பருகினால் மூட்டுக்களை வலுப்படுத்துகிறது
மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் நீக்குகிறது.

மலச் சிக்கல் வாயுத் தொல்லை , வயிற்றுச் சூடு அல்சர் ஆகியவற்றைத் தடுக்கிறது.

கற்றாழை கரும் புள்ளிகளை நீக்கி முகம் பளிச்சிட உதவுகிறது.

கற்றாழை (Aloevera) ஒரு பல்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படும் மூலிகை. குறிப்பாக, சருமம் மற்றும் முடி பராமரிப்பு, உடல்நலம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது. 

 

 

 

கற்றாழை ஜீஸ் செய்முறை:

 

கற்றாழையை எடுத்து மேல் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு, அதனுடன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும். பின் ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.

 

கற்றாழை ஜீஸின் பயன்கள்:

 

  • கற்றாழை ஜீஸ் உடல் எடையைக் குறைக்கிறது.
  • நெஞ்செரிச்சலைப் போக்குகிறது.
  • மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
  • சருமத்திற்கு அழகு சேர்க்கிறது.
  • சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • காயங்களை குணப்படுத்துகிறது.
  • மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
  • மலச் சிக்கலைப் போக்குகிறது..
  • உடல் உஷ்ணத்தைப் போக்குகிறது.
  • வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது.
  • பொடுகு பிரச்சனைகளை சரி செய்கிறது.

 

 

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை:

 

கணக்கற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகைச் செடி கற்றாழை ஆகும். அதன் மேன்மைகளைப் புரிந்து கோண்டால், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செடியாகவும் , வீட்டில் வளர்க்கும் செடியாகவும் கற்றாழை மாறி விடும். பார்க்க பச்சைப் பசேல் என்று இருக்கும் கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்தது என்றால் ஆச்சர்யமாகத் தான் இருக்கும். இந்தக் கற்றாழைக் குடும்பத்தில் சிறு கற்றாழை, பெருங்கற்றாழை என பலவகைகள் உள்ளன. இவற்றில் சோற்றுக் கற்றாழையினையே மருத்துவ ரீதியாக நாம் பயன்படுத்துகிறோம். கற்றாழையின் மடல் மட்டுமின்றி, அதன் வேரையும் மருத்துவ ரீதியாக பயன்படுத்துகின்றனர்.

 

சத்து நிறைந்தது கற்றாழை:

 

கற்றாழையில் நீர்ச்சத்து மிகுதியாக அடங்கியுள்ளது. கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 பி2, பாலிசாக்கரைடுகள், கார்போஹைட்ரேட், புரதம், என்சைம், சாலிசிலிக் அமிலம் போன்றவை ஜெல் போன்ற உள் பகுதியில் அடங்கியுள்ளது.

 

சன் ஸ்க்ரீனாகவும் பயன்படுகிறது:

 

வெயில் காலத்தில் வெளியில் போகும் போது கற்றாழையின் ஜெல்லை சன் ஸ்கீரீனாகவும் உபயோகப் படுத்தலாம். சூரியக் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நிறம் மாறுவதையும் தடுக்கும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது:

 

சில ஆய்வுகளில் கற்றாழையின் சோற்றுப் பகுதியை உட்கோள்வதன் மூலம் பீட்டா செல்கள் தூண்டப்படும் என்றும், இதனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். மேலும், சர்க்கரை அளவை நன்கு பராமரிக்க உதவும் திறனும் கற்றாழைக்கு உண்டு. இதே போல் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.

எப்படி பயன்படுத்துவது:

கற்றாழையை ஜீஸுக்காக பயன் படுத்தினாலும், அப்படியே உட்கொண்டாலும் நன்கு ஆலசிய பிறகே பயன்படுத்த வேண்டும். மடலைச் சீவியவுடன் உள்புறமிருக்கும் சோற்றின் மேல் மஞ்சள் நிற திரவம் படர்திருக்கும். இது கசப்புத் தன்மையைக் கொடுக்கும். எனவே நன்கு அலசிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

 

முகச் சருக்கம் நீங்க:

பப்பாளி, கற்றூலை ஜெல் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி வர முகச்சுறுக்கம் நீங்கும்.

வெள்ளரி , கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி ஜூஸ் கஸந்து முகத்தில் பூசி வர முகச் சுறுக்கம் நீங்கும்.

 

குளிப்பதற்கு பயன்படுத்தலாம்:

உடல் சூடு மற்றும் உடல் சரும எரிச்சல் உள்ளவர்கள் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளிக்கலாம். உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும். கூந்தல் வளர்ச்சிக்காகவும் கற்றாழையை தலையில் தேய்த்து குளிக்கலாம். இதனால் மண்டைப் பகுதியில் உள்ள பொடுகு, பூஞ்சைகள் பாதிப்பு போன்றவை நீங்கும்.

 

கற்றாழையை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தலாம்:

கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவினால் முகம் ஈரப்பதமாக இருக்கும். சருமம் பொலிவுடன் மென்மையாகும்.

 

 

 

கரும்புள்ளிகள் நீங்க:

சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்க கற்றாழை பயன் படுகிறது. பருக்கள் வெடிக்க தயாராக இருக்கும் போது கற்றாழையைப் பயன்படுத்துவதன் மூலம் கரும் புள்ளிகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தாம்பத்திய உறவு சிறக்கும்:

கற்றாழையை உண்டு வருவது தாம்பத்தியம் சீராக செயல் பட உதவும். இதற்கு கற்றாழையை வேக வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்தாம்பத்திய உறவு மேம்படும்.

மகத்துவமான கற்றாழைச் சாறு:

கற்றாழைச் சாறை வெது வேதுப்பாக சூடாக்கி அடிபட்ட இடங்களில், வீக்கத்தில், சிவப்பான இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழைச் சாற்றை நல்லெண்ணெயுடன் சம அளவு கலந்து காய்ச்சி தலையில் வாரம் ஒருமுறை தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். தூக்கமும் நன்றாக வரும். இதே போல் கற்றாழையை சாறெடுத்து வேண்ணேய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து 30 மில்லி சாப்பிட்டால் நீர்ச் சுருக்கு, உடல் வெப்பம், உடல் அரிப்பு நீங்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை:

 

கற்றாழை கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. முடியின் வளர்ச்சியைத் தூண்டும். நன்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளித்து முடி உடைவதைத் தடுக்கிறது. தலைமுடிக்கு கற்றாழை கண்டிஷனர் போல உதவும். எண்ணேயில் இந்த ஜெல்லை மிக்ஸ் செய்து தலைமுடியில் தடவலாம். இதில் , ‘புரோட்டியோலிட்டிக் என்ஸைம்’ உள்ளது. இந்த என்ஸைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி கூந்தலின் வேர்க் கால்களுக்கு ஊட்டமளித்து வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் கூந்தல் உதிர்வு தடுக்கப் பட்டு கூந்தல் நன்றாக வளர பயன் படுகிறது. முகத்துக்கு ஃபேஸ் பேக் போடுவது போல் தலைக்கும் கற்றாழையை வாரம் ஒருமுறை ஹெட் பேக்காக போடலாம்.

சருமத்திற்கு:

கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, வறட்சியைத் தடுக்கிறது, முகப்பருவைக் குறைக்கிறது, மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.

பாத எரிச்சலுக்கு மருந்தாக பயன் படுகிறது.

சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்தது போல எரிச்சல் இருக்கும். இதற்கு இரவில்ஸநுங்கு போன்ற கற்றாழையின் சதைப் பகுதியைத் தடவி கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல், பாத வெடிப்பு குணமாகும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு:

குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள் பட்டை, தொடை, வயிறு, மார்பு பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் கற்றாழையின் சதையை எடுத்துத் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

கோடை வெயிலுக்கு கற்றாழை:

கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நீர்க் கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் எர்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக் கற்றாழை நல்ல மருந்து. சுத்தமான கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்துக் கொண்டு , அதற்குச் சமமான அளவில் பனங் கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இரு வேளைகளிலும் உண்டு வர உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்குக் கண்களில் எரிச்சல் உண்டாகி சிவந்து விடும். கற்றாழையில் நுங்குப் பகுதியை எடுத்து இரவில் தூங்குவதற்கு முன் இரு இண்களின் மேல் சற்று நேரம் வைத்தால் உறக்கம் வருவதோடு கண் எரிச்சல் மற்றும் சிவந்த நிறமும் மறையும்.

கற்றாழை லேகியம்/ குமரி லேகியம்:

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பபை சூடு ஆகியவற்றிற்கு அருமருந்தாக பயன்படுகிறது. இது பெண்களுக்கு அதிக அளவில் பயன் படுவதாலேயே குமரி லேகியம் என்று அழைக்கப் படுகிறது.

செய்முறை:

சோற்றுக் கற்றாழையை தோல் நீக்கி விட்டு உள்புறமிருக்கும் அந்த ஜெல்லை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதனுடன் கருஞ்சீரகப் போடி, கரும்புச் சக்கரை சேர்த்து லேகியம் பதம் வரும் வரை நன்கு கலக்க வேண்டும். மிதமான தீயில் இவ்வாறு செய்யும் போது லேகியம் கிடைக்கும். இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

 

சாதம் வடித்த கஞ்சி 4 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கற்றாழைச் சாறு 4 டீஸ்பூன் பச்சைப் பயறு மாவு 2 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இது திரவ ழடிவில் தான் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்துக்குத் தடவி மசாஜ் செய்து, ஒரிரு நிமிடங்கள் வைத்திருந்த பிறகு முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கற்றாழையை தலையில் தேய்த்து குளிக்கும் போது உடல் சூடு தணியும்.

கற்றாழை அனைத்து கால நிலைகளிலும் வளரக் கூடிய தாவரம் ஆகும். இதை வளர்க்க ஒரு சிறிய இடம் போதும். கணக்கற்ற நன்மைகளைக் கோண்ட கற்றாழையை அனைவரும் வீட்டில் வளர்த்து நலம் பெற வேண்டும்.

 

கற்றாழைச் சாறு குடிப்பது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக, காலையில் ஒரு டம்ளர் மோரில் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனுடன் நன்கு அலசி சுத்தம் செய்த கற்றாழையை சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம். அல்லது தேங்காய்ப் பாலில் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங் கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அடித்துக் குடிக்கலாம். இதைத் தொடந்து குடித்து வரும் போது, உடல் சூட்டை குறைத்து சரும பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து விடும் இது மூல நோயைத் தடுக்கும் சிறந்த மருந்தாகும்.

 

இறுதியாக, கற்றாழை என்பது ஏராளமான ஆரோக்கியம், தோல் பராமரிப்பு, மற்றும் மருத்துவ நன்மைகளுக்கு பெயர் பெற்ற பல்துறை தாவரமாகும். தீக்காயங்களைத்ஸதணித்தல் மற்றும் சருமத்தை பராமரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஏராளமான நன்மைகளைக் கொண்டது. மேற்பூச்சாகப் பயன்படுத்தப் பட்டாலும் சரி, அல்லது மிதமாக உள்ளே உட்கொண்டாலும் சரி, கற்றாழை பல்வேறு வகையான அன்றாட ஆரோக்கியம் நல் வாழ்வுத் தேவைகளுக்கு நம்பகமான மற்றும் பயனுள்ள தீர்வாக அமைகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *