43 Natural health Home Remedies in tamil

இயற்கையான வீட்டு வைத்தியங்கள் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன்று மருத்துவத் துறையில் நாம் எவ்வளவோ முன்னேற்றங்களைக் கடந்து போய் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இயற்கையை மறந்து விட்டோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை மருத்துவ முறைகள், வீட்டு கை வைத்தியங்களை மறந்து விட்டோம். எதற்கு எடுத்தாலும் மருத்துவமனையை நோக்கி ஓடுகிறோம். விளைவு பக்க விளைவுகளைச் சந்திக்கிறோம். நாம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள் அனைத்துமே ஏதாவது ஒரு பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. இன்றைய தலையாய பிரச்சனை சர்க்கரை நோய். அதை அறியாமலேயே நாம் கடந்து செல்கிறோம். இந்தப் பதிவில் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து நம் உடம்பை பாதுகாக்க சில வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது. இதைப் பின்பற்றி நாம் நலமாக வாழ்வோம்.

 

வீட்டு வைத்தியம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • நம் வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்தி கொள்ளலாம்
  • பக்க விளைவுகள் ஏற்படாது.
  • நீண்ட ஆயுளைப் பெறலாம்.

இதோ சில எளிய வழிமுறைகள்:

 

1.திப்பிலியை அரைத்து பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

2. வெற்றிலை, மிளகு மற்றும் ஒரு பல் பூண்டு மூன்றையும் அரைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பருகினால் இருமல், சளி போன்ற வியாதிகள் குணமாகும்.

குறட்டை:

3. குறட்டையிலிருந்து விடுபட 200 மிலி சுடு நீரில் 2 கிராம் ஏலக்காய் பொடி செய்து தினமும் தூங்கும் முன் பருகி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

4.உடம்பில் தீக்காயங்கள் பட்டு விட்டால் தேனில், துளசி சாறு கலந்து தடவினால் விரைவில் குணமாகும்.

5. இன்றைய தலையாய பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர் வரை தொப்பை. இதற்கு சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வந்தால் நிவாரனம் கிடைக்கும்.6. வறட்டு இறுமலை நிறுத்த மிளகுடன் பொரி. கடலை சேர்த்து பொடியாக்கி சாப்பிட வேண்டும்.

7. வில்வ பழத்தை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.

8.வாழைப்பட்டையை தீயில் சூடேற்றி பிழிந்து ஓரிறு துளிகள் விட காது வலி குணமாகும்.

9. தோண்டைப் புண் குணமாக கிராம்பை தணலில் வதக்கி வாயில் போட்டு சுவைக்க வேண்டும்.

 

10. சளி குணமாக துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்க வேண்டும்.மாதுளை எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சளி குணமாகும்.
முள்ளங்கி சாறு குடித்தால் தலைவழி, இருமல், ஜலதோசம் சரியாகும்.

11. அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் கண்கள் , உடல் குளிர்ச்சி அடையும்.

12. கண் எரிச்சல் குணமாக நந்தியா வட்ட பூவை ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

13. இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க அகத்தி கீரையை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

14. சோயாபீன்ஸ் தினமும் உணவுடன் எடுத்துக் கொண்டால் இரத்த சோகை நோய் குணமாகும்.

15. ரோஜா குல்கந்து காலை , மாலை இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டால் கர்ப்ப்பை பலமடையும்.

16. சிறு குறிஞ்சான் இலையை பொடி செய்து சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.

17. தினசரி 3 ஆவாரம் பூவை மென்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.

18. சர்க்கரை நோயாளிகள் ப்ளூ டீ எனப்படும் சங்கு பூ டீ-யை தினமும் குடிப்பதால்  சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

19.வாய்ப் புண்:
பப்பாளி பாலை வாய், நாக்கு புண்ணிற்கு தடவினால் குணமாகும்.
நெல்லி, மா இலைச்சாறு நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால். வாய்ப் புண் குணமாகும்.

20. கீரை வகைகளில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தனாகம் அதிக அளவில் உள்ளது. எனவே கீரைகளை தினமும் உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

21. இரத்த சோகை குணமாக தினமும் உணவில் ஒரு கொய்யா பழத்தை சேர்த்துக் கோள்ள வேண்டும்.

22. காலையில் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

23. மாதுளம் பழம் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் அழியும்.

24. ஒற்றைத் தலைவழி குணமாக சுக்கு பொடி செய்து காலை மாலை இரண்டு வேளை உணவுக்கு பிறகு 2கிராம் தேனுடன் கலந்து 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் தோடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவழி குணமாகும்.

25. சண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட நீரிழிவு நொயாளிகளுக்கு வரும் பாத எரிச்சல், பாத குத்தல், மயக்கம் குணமாகும். தொடர்ந்துசாப்பிட வேண்டும்

26.சீரகத்தில் எபிஜெனின், லூடியோலின் என்ற இரண்டு கெமிக்கல் உள்ளது. புற்றுநோய் மற்றும் இதய நோய் குணப்படுத்த கூடிய ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கெட்ட கொழுப்பு கரையும்.

27. கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் சோம்பு குடிநீரில் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சோம்பு தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும்.

28. சிறுநீரகத்தை சத்தப்படுத்த எலுமிச்சை சாறு மற்றும் ஆரஞ்சு மிகவும் உதவியாக இருக்கும். பழச்சாறு சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

29. கீழாநெல்லி இலையை நன்கு மென்று துப்பி விட வேண்டும். இதனால் பல்வலி, ஈறுகளில் இரத்தம் வடிதல் குணமாகும்.

30. பீட்ரூட் , கேரட், மல்லித்தழை, இஞ்சி, கீரீன் ஆப்பிள், பாதாம் பருப்பு ஆகியவற்றை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிக்க வேண்டும். இதனால் கல்லீரல் சுத்தமாகும்.

31. செம்பருத்தி பூ ஜீஸ் குடிப்பதால் கெட்ட கொழுப்பு கரையும். இதய நோய்கள் குறையும்.

32. உடல் குளிர்ச்சியடைய ரோஜா இதழ் குடிநீர் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

33. சந்தனம் மற்றும் பச்சைப் பயறு மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகப் பரு குணமாகும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மறையும்.

34. முகம் பளபளப்பாக எலுமிச்சை சாறு பிழிந்து முகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பிடித்து வர வேண்டும். 35. நரம்பு தளர்ச்சி குணமாக நூல் கோல் கிழங்கு அடிக்கடிசாப்பிட்டு வர வேண்டும்.

36. வெங்காய சாற்றை வியர்க்குரு மேல் தடவி வந்தால் வியர்க்குரு மறையும். உடல் குளிர்ச்சியாகும்.

37. கீழாநெல்லி செடி மமுழுவதும் அரைத்து மோரில் கலந்து இரு வேலை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும்.

38. தலைவலி குணமாக அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ வேண்டும்.

39. சேற்றுப் புண் சரியாக காய்ச்சிய வேப்ப எண்ணேயை தடவி வர வேண்டும்.

40. வயிற்றுப்புண் குடல்புண் குணமாக மணத்தக்காளி கீரையை பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.

41.இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் ஆகும்.

42. சுக்கை அரைத்து பற்று போட்டால் தலைவலி குணமாகும். குப்பை மேனி இலை சாறு தடவ தலைவலி குணமாகும்.

 

 

எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகுவது சிறந்தது. 

இயற்கை வீட்டு வைத்தியத்தின் பயன்கள்:

 

       இயற்கை சுகாதார வீட்டு வைத்தியங்கள் ஆரோக்கியத்திற்கான முழுமையான
அணுகுமுறையை வழங்குகின்றன, உடலின் உள்ளார்ந்த குணப்படுத்தும் மற்றும்
சமநிலையை பராமரிக்கும் திறனை வலியுறுத்துகின்றன. மூலிகைகள், மசாலாப்
பொருட்கள் மற்றும் அன்றாட வீட்டுப் பொருட்கள் போன்ற எளிய, இயற்கை
பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், மருந்து சிகிச்சைகளுடன் பெரும்பாலும் தொடர்புடைய
பக்க விளைவுகள் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம். தேன் மற்றும்
இஞ்சியுடன் ஜலதோஷத்தைத் தணிப்பது முதல் மஞ்சள் மற்றும் வைட்டமின் நிறைந்த
தேநீர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, இந்த வைத்தியங்கள்
அன்றாட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு மலிவு, அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குகின்றன.

       இருப்பினும், சிறிய நோய்களுக்கு இயற்கை வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என்றாலும், அவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை என்பதை
நினைவில் கொள்வது அவசியம், குறிப்பாக கடுமையான அல்லது நாள்பட்ட
நிலைமைகளில். அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது மோசமடையும் போது எப்போதும்
ஒரு சுகாதார வழங்குநரை அணுகவும்.

        இந்த இயற்கை நடைமுறைகளைத் தழுவுவது உடல் நலனை மேம்படுத்துவதோடு
மட்டுமல்லாமல், இயற்கை உலகத்துடன் ஆழமான தொடர்பையும் வளர்த்து,
மனப்பூர்வமான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. இந்த வைத்தியங்களை நீங்கள்
ஆராயும்போது, ​​உங்கள் உடலைக் கேளுங்கள், தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்,
மேலும் உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக முன்னுரிமைப்படுத்துங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கை நமக்கு குணப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த
கருவிகளை வழங்கியுள்ளது – நாம் அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *